உலகளவில் நிலவும் பதற்றங்கள்.. எரிசக்தி துறையில் இந்தியாவின் வலிமையும்.. பல்வழி இறக்குமதியும்.. முழு விவரம்..

இந்தியாவில் 20% எத்தனால் கலவை திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 6 மில்லியன் டன் கச்சா எண்ணெய் (44 மில்லியன் பேரல்கள்) இறக்குமதி தேவையை குறைக்க முடிகிறது. இது வெளிநாட்டு நாணயச் செலவையும் குறைத்து விவசாயிகளுக்கு வருமானத்தை வழங்குகிறது.

உலகளவில் நிலவும் பதற்றங்கள்.. எரிசக்தி துறையில் இந்தியாவின் வலிமையும்.. பல்வழி இறக்குமதியும்.. முழு விவரம்..

கோப்பு புகைப்படம்

Published: 

07 Mar 2026 09:43 AM

 IST

மார்ச் 7, 2026: உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கிடையிலும், இந்தியா வலுவான மற்றும் திட்டமிட்ட எரிசக்தி கொள்கையின் மூலம் தனது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியா தற்போது உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் மொத்தமாக 250 மில்லியன் பேரல்கள் (சுமார் 4,000 கோடி லிட்டர்) அளவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் கையிருப்பில் உள்ளன.

இது மொத்தமாக 7 முதல் 8 வாரங்களுக்கு தேவையான கையிருப்பை வழங்கக்கூடியதாகும். இந்த கையிருப்புகள் மேற்பரப்பு சேமிப்பு தொட்டிகள், குழாய் அமைப்புகள் மற்றும் மங்களூர், படூர், விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் உள்ள ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் குகைகளில் சேமிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி:

கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளின் எண்ணிக்கையை 27 நாடுகளில் இருந்து 40 நாடுகளாக உயர்த்தியுள்ளது. தற்போது இந்தியா ரஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து எண்ணெய் பெறுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40% மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாக வருகிறது. மீதமுள்ள 60% பிற வழிகளிலிருந்து வருகிறது. இதனால் ஒரு பாதை பாதிக்கப்பட்டாலும் எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படாது.

மேலும் படிக்க: அமெரிக்கப் படைகளைத் தாக்க ஈரானுக்கு கைகொடுக்கும் ரஷ்யா.. கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்..

சுத்திகரிப்பு திறன்:

இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 258 மில்லியன் மெட்ரிக் டன் (MMTPA) ஆகும். இது உலகில் நான்காவது பெரிய திறனாகும். நாட்டின் உள்நாட்டு தேவையான 210–230 MMTPA அளவை விட இது அதிகமாக உள்ளது. இதனால் இந்தியா உலகின் முக்கியமான சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி நாடுகளிலும் ஒன்றாக உள்ளது.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் எத்தனால் கலவை:

இந்தியாவில் 20% எத்தனால் கலவை திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 6 மில்லியன் டன் கச்சா எண்ணெய் (44 மில்லியன் பேரல்கள்) இறக்குமதி தேவையை குறைக்க முடிகிறது. இது வெளிநாட்டு நாணயச் செலவையும் குறைத்து விவசாயிகளுக்கு வருமானத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருதா? அமெரிக்கா சொன்ன ஹேப்பி நியூஸ்!

விலை நிலைத்தன்மை:

கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பெரும்பாலும் நிலையாக உள்ளன. உலகளவில் விலைகள் அதிகரித்த காலத்திலும் இந்தியாவில் பெரிய மாற்றம் இல்லை. கடந்த 12 ஆண்டுகளில் ஒரு பெட்ரோல் பங்கிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை.

பொதுமக்களுக்கான எல்பிஜி ஆதரவு:

இந்தியாவில் தற்போது 33.3 கோடி LPG பயனாளிகள் உள்ளனர். அதில் 10.53 கோடி பேர் பிரதான் மந்திரி உஜ்வலா (PMUY) திட்ட பயனாளிகள். இந்த திட்டத்தின் கீழ் 14.2 கிலோ சிலிண்டரின் விலை ₹553 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த விலையாகும்.

மொத்தத்தில், எரிசக்தி துறையில் இந்தியாவின் கொள்கை மலிவு, கிடைக்கும் தன்மை மற்றும் நிலைத்தன்மை என்ற மூன்று அடிப்படைகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியா உலகளாவிய மாற்றங்களுக்கிடையிலும் தனது எரிசக்தி பாதுகாப்பை உறுதியாக காப்பாற்றி வருகிறது.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி