உயர்கிறது ரயில் டிக்கெட் கட்டணம் – ஜூலை 1 முதல் அமல் – எந்தெந்த ரயில்களுக்கு கூடுதல் கட்டணம்?

Rail Ticket Price Rise : இந்திய ரயில்வே கட்டண முறையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. ஏசி உள்ளிட்ட பிரிவுகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்லது. இந்த கட்டண உயர்வு வருகிற ஜூலை 1, 2025 அன்று முதல் அமலுக்கு வரவிருக்கிறது. இந்த கட்டுரையில் எந்த வகை ரயில்களுக்கு கட்டண உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உயர்கிறது ரயில் டிக்கெட் கட்டணம் - ஜூலை 1 முதல் அமல் - எந்தெந்த ரயில்களுக்கு கூடுதல் கட்டணம்?

மாதிரி புகைப்படம்

Published: 

24 Jun 2025 17:14 PM

இந்தியாவில் (India) எளிய மக்கள் பயணிப்பதற்கான ஒரே தேர்வு ரயில் மட்டும் தான். காரணம், அதில் கட்டணம் குறைவு, நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது என்பதால் மக்கள் இதனை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிலையில் இந்திய ரயில்வே (Indian Railways) தனது கட்டண முறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.   வருகிற ஜூலை 1, 2025 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும் என இந்திய ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பயணக் கட்டணங்கள் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஏசி வகை மற்றும்  எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு (Express Train) கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், நகர்ப்புற பயணிகளுக்கும், மாத சீசன் டிக்கெட் பெற்று பயணிப்பவர்களுக்கும்  எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

 500 கிமீ வரை கட்டணம் அதிகரிக்கப்படவில்லை

இந்த நிலையில் 500 கிலோமீட்டருக்குள் செகண்ட் கிளாஸ் எனப்படும் சாதாரண இரண்டாம் தர பெட்டிகளில் பயணிக்க, கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவற்றிற்கு பழைய முறையிலான கட்டணம் மாற்றமின்றி தொடரும். ஆனால், 500 கிமீக்கு மேல் பயணிக்கிறவர்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு பாதி பைசா (0.5 paise) என்ற அளவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.  ஊதாரணமாக 1000 கிலோ மீட்டர் பயணிப்பவர்களுக்கு கூடுதலா ரூ.2.50 கட்டண உயர்வு இருக்கும்.

நான் ஏசி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம்

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நான் ஏசி பிரிவில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதலாக ட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக ஒருவர் 1000 கிலோ மீட்டர் கூடுதலாக பயணித்தால் அவர் முன்பை விட ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

ஏசி பிரிவில் பயணிப்பவர்களுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா கூடுதல் கட்டணம்

ஏசி சேர் கார், ஏசி 3 டயர், 2 டயர் அல்லது 1 ஆம் வகுப்பு ஏசி போன்ற அனைத்து ஏசி வகை பிரிவுகளுக்கும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக ஒருவர் 1000 கி.மீட்டர் பயணித்தால், அவர் ரூ.20 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

 கட்டணத்தில் மாற்றமில்லாத பயணங்கள்

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகர்புற ரயில்களில் அன்றாடம் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை.  அதே போல தினசரி பள்ளி மற்றும் அலுவலகத்துக்காக மாத சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

இந்த கட்டண உயர்வுகள் பெரும்பாலும் தொலைதூர பயணிகளுக்கு மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரயில்வே செலவுகளை சமநிலைப்படுத்தும் முயற்சி என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். இதனையடுத்து அதன் பிறகு டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் இதை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும்.