Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Money Heist பாணியில் கர்நாடகா வங்கி கொள்ளை… பலே திட்டம் தீட்டிய கொள்ளையர்கள்..!

Sweet Shop to Heist Mastermind: அக்டோபர் 28, 2024 அன்று கர்நாடகாவின் நியமதி SBI வங்கியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 17.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையை மதுரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படித்த விஜய்குமார் திட்டமிட்டு 5 பேர் கொண்ட குழுவுடன் செயல் படுத்தினார். தீவிர விசாரணையுடன் 6 பேர் கைது செய்யப்பட்டு, தங்க நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Money Heist பாணியில் கர்நாடகா வங்கி கொள்ளை… பலே திட்டம் தீட்டிய கொள்ளையர்கள்..!
கர்நாடகா வங்கி கொள்ளை வெளியான திடுக்கிடும் தகவல்கள் Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 13 Apr 2025 09:12 AM IST

கர்நாடகா ஏப்ரல் 13: 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி, கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டம், நியாமதி டவுனில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) வங்கியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 17.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 6 பேரைக் கைது செய்துள்ளனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட, வங்கி கொள்ளையை திட்டமிட்ட குழுவின் உறுப்பினர்கள் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10-ஆம் வகுப்புகூட தாண்டாத தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் பலே திட்டம் தீட்டி வங்கியில் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி நாட்டையே திரும்பி பார்க்கவைத்தது.

வங்கியில் நடந்த கொள்ளை திட்டம்

தமிழகத்தை சேர்ந்த 30 வயதான 8 ஆம் வகுப்பு மட்டும் படித்த விஜய்குமார் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். கர்நாடகாவில் நிகழ்ந்த மிகப்பெரிய மற்றும் துணிச்சலான வங்கிக்கொள்ளையை விஜய்குமார் மிக நுட்பமாக திட்டமிட்டு, தனது ஐந்து பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து ஒத்திகை நடத்தியதின் பயனாக, அந்தக் கொள்ளை முழுமையாகச் செயல்படுத்தப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க கர்நாடக போலீசாருக்கு ஐந்து மாதங்கள் ஆகின.

போலீசாரின் தீவிர விசாரணைகளுக்கு பின்னர், இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் யூடியூப் மற்றும் ஓடிடி தளங்களில் பார்க்கப்பட்ட வீடியோக்களின்படி, ஒரு திட்டமிட்ட முறையில் கொள்ளையை நடத்தியதாகவும், பல மாதங்களாக போலீசாரால் தீவிர தேடல் நடத்தியதாகவும் தெரியவந்தது.

காவல்துறையின் வெற்றி

இந்த கொள்ளை 2024ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி தவனகிரே மாவட்டத்தின் நியமதி பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) கிளையில் நடைபெற்றது. இதில் ரூ.13 கோடி மதிப்பிலான 17.7 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சமீபத்தில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி விஜய்குமார் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அஜய்குமார் (28), அபீஷேகா (23), சந்துரு (23), மஞ்சுநாத் (32), பரமாநந்தா (30) ஆகியோரும் உள்ளனர். இவர்களது முயற்சிக்கு, கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா அவர்கள் சிறப்பு பதக்கங்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

விஜய்குமாரின் கதையும், திட்டமும்

“மிகுந்த புத்திசாலி” என்ற பெயரால் அழைக்கப்படும் இனிப்புக் கடை உரிமையாளர் விஜய்குமார் தொடர்பான மேலும் சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இக்கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் மூவருக்குள் குடும்பத் தொடர்புகள் உள்ளன.

விஜய் மற்றும் அஜய் சகோதரர்கள், பரமாநந்தா அவர்களின் மாமனார். மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கர்நாடகாவின் நியமதி பகுதியில் இனிப்புக்கடை நடத்தி வந்தனர். மற்ற மூவர் — அபீஷேகா, சந்துரு மற்றும் மஞ்சு — நியமதியிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்.

கொள்ளைத் திட்டத்தை தீவிரமாக திட்டமிட்ட ‘தீரன்’ விஜய்குமார்!

மதுரைச் சேர்ந்த விஜய்குமார், ஸ்பெயின் அடிப்படையிலான வெற்றி பெற்ற Money Heist தொடர் மற்றும் 2017-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகியவற்றை யூடியூபில் ஐந்து முதல் ஆறு முறை வரை மீண்டும் மீண்டும் பார்த்துள்ளார். வங்கி கொள்ளையை திட்டமிடவும், தன்னுடைய திறமைகளை மேம்படுத்தவும் இதன் மூலம் பயிற்சி பெற்றுள்ளார்.

விஜய்குமார் குறிவைத்த வங்கி — ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ந்யாமதி கிளை — இதே வங்கியில் ₹15 லட்சம் கடனுக்கு விண்ணப்பித்த அவர், குறைந்த கடன் மதிப்பீட்டின் காரணமாக மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கிளையைத் தான் குறிக்கோளாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

வங்கி ஒரு நெருக்கமான குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்தாலும், அதன் பின்புறம் பரந்த நிலப்பரப்புகள் உள்ளதைக் கண்காணித்த விஜய், வங்கியின் பாதுகாப்பு குறைகளை ஆய்வு செய்து, முன்னதாகவே திட்டத்தை சீராக வகுத்து கொள்ளையள் ஈடுபட்டுள்ளார்.

கொள்ளையடித்த நகைகள் எங்கே இருந்தது?

கல்வி குறைவாக இருந்தாலும், தன் புத்திசாலித்தனத்துடன், விஜய்குமார் மற்றும் அவரது குழு அதிரடி செய்தியை உலகிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். விஜய்குமார், இந்த வங்கி கொள்ளையை முழுமையாக திட்டமிட்டு செயல்படுத்தி, கர்நாடகாவில் இருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார்.

வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு

போலீசாரின் விசாரணையின் பின், அஜய், விஜய்குமார், மஞ்சுநாத், சந்திரசேகர் மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இறுதியில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த 17.7 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.