அகமதாபாத் விமான விபத்து.. டாக்டர் எடுத்த கடைசி செல்ஃபி.. குடும்பத்துடன் உயிரிழந்த சோகம்!
Ahmedabad Plane Crash : அகமதாபாத் விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் 5 பேர் உயிரிழந்துள்ளனர். லண்டன் செல்ல இருந்த மருத்துவர் கோமி வியாஸ், அவரது கணவர் பிரதிக் ஜோஷி அங்கு செல்ட்டில் ஆவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்து, தனது மூன்று குழந்தைகளுடன் பயணத்தை தொடங்கினர். விமானம் புறப்பட்டபோது குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

உயிரிழந்த குடும்பம்
குஜராத், ஜூன் 13 : அகமதாபாத் விமான விபத்தில் (Ahmedabad Plane Crash) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான சில மணி நிமிடங்களுக்கு முன்பு, தாங்கள் எடுத்த செல்ஃபியை உறவினர்களுக்கு பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூன் 12ஆம் தேதி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு சோக நாளாக அமைந்தது. 2025 ஜூன் 12ஆம் மதியம் 1.30 மணியளில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா (Air India) விமானம் விபத்துக்குள்ளானது. போயிட் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பிஜே மருத்துவ கல்லூரி விடுத்தியின் மேல் விழுந்து தீப்பிடித்தது.
அகமதாபாத் விமான விபத்து
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் 230 பயணிகள், 2 பைலட்டுகள், 10 பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்களில் 241 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். இந்த விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
அதே நேரத்தில், மருத்துவ கல்லூரியில் விமானம் மோதியதில் மருத்துவ மாணவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி இருக்கிறது. இந்த சூழலில், சமூக வலைதளங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.
அதாவது, அவர்கள் விபத்திற்கு சில மணி நிமிடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மருத்துவர் பிரதிக் ஜோஷி, அவரது மனைவி மருத்துவர் கோமி வியாஸ், அவரது மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மருத்துவர் கோமி வியாஸ் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
💔 A Family’s final photo aboard AI171
Dr Komi Vyas quit her Udaipur hospital job to start a new life in London with husband Dr. Prateek Joshi
Their selfie on the Air India plane captured joy…just minutes before tragedy struck
The couple and their 3 children..
8 year old… pic.twitter.com/4T06cm04I1— Nabila Jamal (@nabilajamal_) June 12, 2025
அவரது கணவர் பிரதீக் ஜோஷி கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கோமி வியாஸ் மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் இந்தியாவில் வசித்து வந்துள்ளனர். கணவருடன் லண்டனில் செட்டில் ஆவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார் கோமி வியாஸ்.
தனது மனைவியையும், மூன்று குழந்தைகளையும் அழைத்து கொண்டு லண்டன் செல்ல சமீபத்தில் பிரதிக் ஜோஷி ராஜஸ்தான் வந்துள்ளார். இந்த நிலையில், 2025 ஜூன் 12ஆம் தேதியான நேற்று அவர்கள் ஐந்து பேரும் லண்டன் செல்ல ஏர் இந்தியா விமானத்தில் சென்றனர்.
அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கடைசியாக எடுத்துக் கொண்ட செல்ஃபி பலரையும் கலங்க வைத்துள்ளது. அந்த செல்ஃபியில் டாக்டர் ஜோஷி, அவரது மனைவியும் ஒரு பக்கத்தில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருப்பதையும், அவர்கள் மூன்று குழந்தைகள் எதிர் சீட்டில் அமர்ந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.