வாடிக்கையாளரின் 2 கிலோ தங்கத்தை திருடி விற்பனை செய்த மேலாளர்.. அதிர்ச்சி சம்பவம்!
Assistant Manager Stole 2KGs of Customer Gold | பெங்களூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் துணை மேலாளர் ஒருவர் வாடிக்கையாளர் அடகு வைத்த சுமார் 2 கிலோ தங்கத்தை திருடி விற்பனை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
பெங்களூரு, பிப்ரவரி 15 : பெங்களூரில் (Bengaluru) உள்ள ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளர் அடமானம் வைத்த 2 கிலோவுக்கு அதிகமான தங்கம் காணாமல் போன வழங்க்கில், அந்த வங்கியின் துணை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளரின் நகைகளை அவர் திருடி விற்பனை செய்தது தெரிய வந்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கி துணை மேலாளரே வாடிக்கையாளரின் நகைகளை திருடி விற்பனை செய்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
காணாமல் போன வாடிக்கையாளரின் 2 கிலோ 783 கிராம் தங்க நகைகள்
கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரில் உள்ள கிரிநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் உதவி மேலாளராக கிரண் குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் அடமான வைத்திருந்த சுமார் 2 கிலோ 783 கிராம் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கிரண் குமார் சிக்கியுள்ளார்.
இதையும் படிங்க : அசாமில் வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம்.. வடகிழக்கின் முதல் ELF-இல் பிரதமர் மோடி
வாடிக்கையாளரின் தங்க நகைகளை திருடி விற்பனை செய்த துணை மேலாளர்
அதாவது அந்த வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்த கிரண் குமார் அந்த வாடிக்கையாளர்களின் நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக திருடி நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் அந்த வாடிக்கையாளரின் நகைகளை விற்பனையும் செய்துள்ளார். இது குறித்து தெரிய வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க : உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த 10 மாத குழந்தை.. கேரளாவில் மனதை உலுக்கும் சம்பவம்!
ரூ.4 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு
அந்த வங்கி துணை மேலாளர் திருடி விற்பனை செய்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 12 லட்சம் ஆகும். வங்கி மேலாளரே நகையை திருடி விற்பனை செய்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.