விங் கமாண்டர் மரணம்… மனைவியாகவும், விமானப்படை அதிகாரியாகவும் அஞ்சலி… சோகத்தில் மூழ்கிய கிராமம்

Heartbreaking Last Goodbye: துபாயில் நடைபெற்ற ஏர்ஷோ விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் நமன்ஷ் சயாலுக்கு அவரது சொந்த ஊரில் அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது விமானப்படை அதிகாரியான அவரது மனைவி இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் காண்போரை நெகிழ செய்தது.

விங் கமாண்டர் மரணம்... மனைவியாகவும், விமானப்படை அதிகாரியாகவும் அஞ்சலி... சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஏர் ஷோ நிகழ்வில் உயிரிழந்த நமன்ஷ் சயாலுக்கு இறுதி அஞ்சலி

Published: 

23 Nov 2025 18:44 PM

 IST

துபாயில் (Dubai) கடந்த நவம்பர் 22, 2025 அன்று நடைபெற்ற ஏர்ஷோ (Air Show) நிகழ்வில் இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் போர் விமான விபத்தில் சிக்கியது.  இந்த துபாய் ஏர் ஷோவில் உயிரிழந்த விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் நமன்ஷ் சயாலுக்கு, அவரது சொந்த ஊரான ஹிமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டம், பதியால்கர் கிராமத்தில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.  அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அர மரியாதைகளுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.  இந்திய விமானப்படையில் பணியாற்றும் விங் கமாண்டர் நமன்ஷ் சயாலின் மனைவியும், இந்திய விமானப்படையில் பணியாற்றும் விங் கமாண்டருமான ஆஃப்ஷான் குடும்பத்தினர், உறவினர்கள் சூழ்ந்தநிலையில் கண்கலங்கியபடி தனது கணவருக்கு இறுதி மரியாதை செலுத்திய வீடியோ நாடு முழுவதும் மக்களை கண் கலங்க வைத்துள்ளது.

கணவருக்கு இறுதி மரியாதை செலுத்திய விங் கமாண்டர்

துபாயில் நடைபெற்ற ஏர்ஷோ நிகழ்வில் உயிரிழந்த கமாண்டர் நமன்ஷ் சயாலுக்கு அவரது சொந்த கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் அவரது மனைவியும் சக விங் கமாண்டருமான ஆஃப்ஷான ஒரு மணைவியாகவும், விமானப்படை வீரராகவும் இறுதி மரியாதை செலுத்திய காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது. இத்தம்பதியினருக்கு  5 வயதில் மகளும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தேஜஸ் விபத்தில் பலியான விங் கமாண்டர்.. சோகத்தில் மூழ்கிய அவரது சொந்த கிராமம்!

மனைவியாகவும் விமானப்படை வீரராகவும் இறுதி அஞ்சலி செலுத்தி ஆஃபான்ஷ்

இதையும் படிக்க : துபாய் ஏர் ஷோ…. இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் அவர் குறித்து, “தன்னலம் பாராது நாட்டிற்காக பணியாற்றிய உயர்ந்த மனப்பான்மை கொண்ட, திறமையும் பொறுப்புணர்வும் நிறைந்த அதிகாரி என அவருக்கு புகழஞ்சலி செலுத்தியது. அறிக்கையில் மேலும், அவரின் வீரத்தையும், இந்தியா மீது அவர் வைத்திருந்த பற்றையும், தியாகத்தையும் இந்திய விமானப்படை என்றும் நினைவுகூரும். ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள், சக ஊழியர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த இறுதி மரியாதையில், அவரது கண்ணியமான ஆளுமை தெரிந்தது என்று கூறப்பட்டது. அவரது இறுதி மரியாதை வீடியோ நாட்டையே உலுக்கியது

TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?
திரிஷ்யம் 3 படம் இப்படி தான் இருக்கும்.. மனம் திறந்த ஜித்து ஜோசப்..
15,000 கி.மீ பயணித்த மாரிச் கழுகு
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி