Health Tips: வண்ண நீரில் ஹோலி விளையாட ஆசையா? இந்த தவறு வேண்டாம்.. ஆரோக்கியம் கெடும்!

Holi Safety Tips: ஹோலி பண்டிகையின்போது மணிக்கணக்கில் ஈரமான ஆடைகளில் இருக்க வேண்டிய சூழல் உண்டாகும். ஹோலி கொண்டாட்டங்கள் தொற்று எளிதில் பரவும் சூழ்நிலைகளை உருவாக்கும். வாளிகள், பலூன்கள் மற்றும் தண்ணீர் துப்பாக்கிகள் மூலம் தண்ணீருடன் விளையாடுவது ஹோலி கொண்டாடப்படுகிறது. ஆனால் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

Health Tips: வண்ண நீரில் ஹோலி விளையாட ஆசையா? இந்த தவறு வேண்டாம்.. ஆரோக்கியம் கெடும்!

ஹோலி பண்டிகை

Published: 

28 Feb 2026 19:36 PM

 IST

ஹோலி பண்டிகை (Holi) வட நாட்டு பண்டிகை என்றாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் கலர் பொடிகள் மற்றும் தண்ணீர் தெளிப்பு துப்பாக்கிகளில் வண்ண நீர்களை கலந்து பிறர் மீது தெளிக்கிறார்கள். இருப்பினும், இந்த நீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை தரும் என்று உங்களுக்கு தெரியுமா..? ஹோலி பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் அழுக்கு மற்றும் அசுத்தமான நீர் பல நோய்களை ஏற்படுத்தும். குறிப்பாக வயிற்றுப்போக்கு, தோல் தொற்று மற்றும் கண் பிரச்சினைகள் (Eye Problem) போன்ற பிரச்சினைகள் விரைவாக அதிகரிக்கும். ஹோலி விளையாடுவதற்கு முன்பு, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தினமும் இரவில் உடலில் இந்த அறிகுறிகளா? இது சிறுநீரக செயலிழப்பு!

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை:

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மாசுபட்ட நீர் உலகளவில் இரைப்பை குடல் தொற்றுகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாகும். இது வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு மற்றும் ஹைபடைடிஸ் ஏ போன்ற நோய்களை ஏற்படுத்தலாம். பாக்டீரியா வளர்ச்சி வேகமாக இருக்கும் போது, ​​மக்கள் கூடும் இடங்களிலும், வெப்பமான மாதங்களிலும், நீரால் பரவும் நோய்கள் பெரும்பாலும் அதிகரிக்கும் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) குறிப்பிடுகிறது.

ஹோலி கொண்டாட்டங்கள் தொற்று எளிதில் பரவும் சூழ்நிலைகளை உருவாக்கும். வாளிகள், பலூன்கள் மற்றும் தண்ணீர் துப்பாக்கிகள் மூலம் தண்ணீருடன் விளையாடுவது ஹோலி கொண்டாடப்படுகிறது. ஆனால் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

சரும பிரச்சனைகள்:

ஹோலி பண்டிகையின்போது மணிக்கணக்கில் ஈரமான ஆடைகளில் இருக்க வேண்டிய சூழல் உண்டாகும். மேலும் அழுக்கு நீரை தொட்டு விளையாடவும் செய்வோம். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அரிப்பு, சிவத்தல் அல்லது தடிப்புகள் பொதுவான பிரச்சனைகளாக மாறக்கூடும். ஏற்கனவே, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தோல் பிரச்சனையை சந்திக்காமல் இருக்க ஹோலிக்கு பிறகு உடனடியாக நன்றாக குளித்துவிட்டு சருமத்தை நன்றாக உலர்த்துவது நல்லது.

வயிற்றுப்போக்கு அபாயம்:

ஹோலி பண்டிகையின் போது, ​​தொட்டிகள், குழாய்கள் அல்லது திறந்தவெளிகளில் இருந்து வரும் தண்ணீர் பெரும்பாலும் அசுத்தமாக இருக்கும். இந்த நீர் வாய்க்குள் சென்றால், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உடலுக்குள் நுழையும். இது வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், சுத்தமான மற்றும் பாதுகாப்பான தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

ALSO READ: சுத்தமான குடலே ஆரோக்கியம்.. ஹெல்த்தியாக வைத்திருக்க டாக்டர் சொல்லும் அறிவுரை!

கண் மற்றும் காதுகளில் பிரச்சனை:

கண்கள் அல்லது காதுகளில் தண்ணீர் மற்றும் நிறம் படிந்தால், அவை தொற்றுநோயை ஏற்படுத்தும். கண்களில் எரிச்சல், சிவத்தல் மற்றும் நீர் வடிதல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். கண்களில் அழுக்கு நீர் படிந்தால், உடனடியாக சுத்தமான தண்ணீரில் கழுவவும். இருப்பினும், கண்களில் அசௌகரியம் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது முக்கியம்.

Follow Us
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்
இந்திய சாதி அமைப்பை உள்வாங்கிய AI.. எழும் கவலைகள்..
இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..