Unhealthy Breakfast: காலை உணவில் தவறாமல் இது இடம்பெறுமா..? இதய நோய் பிரச்சனை உண்டாகலாம்!

Morning Food: இரவு உணவிற்குப் பிறகு காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் இன்றும் கூட, சில வீடுகளில், மக்கள் காலை உணவாக முக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடுகிறார்கள். இவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்.

Unhealthy Breakfast: காலை உணவில் தவறாமல் இது இடம்பெறுமா..? இதய நோய் பிரச்சனை உண்டாகலாம்!

காலை உணவு

Published: 

29 Sep 2025 16:41 PM

 IST

காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். நீங்கள் காலை உணவாக சாப்பிடுவது உங்கள் முழு நாளையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இன்றைய நவீன காலத்தில் பணி சுமை காரணமாக பலரும் காலை உணவை சாப்பிடுவது இல்லை. இது அவர்களது அன்றைய நாள் முழுவதும் சோர்வை தரும். இரவு உணவிற்குப் பிறகு காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் இன்றும் கூட, சில வீடுகளில், மக்கள் காலை உணவாக முக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடுகிறார்கள். அதன்படி, இதய நோய் (Heart Disease) மற்றும் பக்கவாதம் (Paralysis) ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும் காலை உணவுகளின் பட்டியலை பற்றி தெரிந்து கொள்வோம்.

சூடான பூரி:

பல வீடுகளில், காலை உணவில் சூடான பூரி மற்றும் உருளைக்கிழங்கு குருமா இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு, பூரி பெரும்பாலும் காலை உணவாக தயாரிக்கப்படுகிறது. இதனால் குழந்தை நன்றாக காலை உணவை சாப்பிடும். இதுதான் மிகப்பெரிய தவறு. எண்ணெயில் வறுத்த பூரி மற்றும் உருளைக்கிழங்கு குருமா ஆகியவை கொழுப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

ALSO READ: மாரடைப்பு வந்தால் CPR கொடுப்பது எப்படி..? மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி விளக்கம்!

மசாலா தோசை:

மசாலா தோசை ஒரு பிரபலமான இந்திய காலை உணவாகும். இது பல வீடுகளில் தயாரிக்கப்படுகிறது. இதில் அதிக எண்ணெய் சத்து இருப்பதால் அது ஆரோக்கியமானதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்த கலவையை உருளைக்கிழங்கு காய்கறிகளுடன் சாப்பிடும்போது இதய ஆரோக்கியத்திற்கு இன்னும் தீங்கு விளைவிக்கும். இதற்கு பதிலாக, தினை தோசையை உங்கள் உணவில் சேர்ப்பது ஒரு ஆரோக்கியமான உணவாக பார்க்கப்படுகிறது.

உப்மா:

உப்மா ஒரு பிரபலமான காலை உணவு. இது பல வீடுகளில் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் உப்மா ரவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ரவை மெருகூட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுவது என்பதால் இது ஆரோக்கியமானதல்ல. இதில் புரதம், நார்ச்சத்து போன்ற எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. அத்தகைய காலை உணவு உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் விரைவாக அதிகரிக்கிறது.

டீ மற்றும் பிஸ்கட்:

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட நாளை டீ மற்றும் பிஸ்கட்டுடன் தொடங்குகிறார்கள். இருப்பினும், இந்த காலை உணவு உங்களை பல நோய்கள் உண்டாக வழிவகுக்கும். இதில் நிறைய சர்க்கரை மற்றும் பாமாயில் உள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பிரட் மற்றும் ஜாம் கலவை:

பிரட் மற்றும் ஜாம் அனைவருக்கும் பிடித்தமான விரைவான மற்றும் சுவையான காலை உணவு விருப்பமாகும். இருப்பினும், இந்த கலவையானது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் நிறைய சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் பாமாயில் உள்ளன. இவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்.

ALSO READ: சாப்பிட்ட பிறகு வயிறு வீங்கியதாக உணர்வா..? சரிசெய்யும் கிட்சன் பொருட்கள்..!

ஆரோக்கியமான காலை உணவாக எதை சாப்பிடலாம்..?

டயட் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சரியான காலை உணவில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் சமநிலையைக் கொண்டிருக்க வேண்டும். முட்டை, இட்லி, காய்கறி, பனீர் சாண்ட்விச், கீரை வகைகள், ஓட்ஸ், சப்பாத்தி ஆகியவை சில நல்ல மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகும்.