Health Tips: எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றலா? இந்த நோயின் அறிகுறி..!

Standing Dizziness: ஒரு நபர் நிற்கும்போது அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது முக்கியம். அதன்படி, உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். நீங்கள் இதை தொடர்ந்து புறக்கணிக்கும்போது, உங்களுக்கு எலும்பு முறிவு மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

Health Tips: எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றலா? இந்த நோயின் அறிகுறி..!

தலைச்சுற்றல்

Published: 

11 Feb 2026 15:52 PM

 IST

உங்களுக்கு திடீரென தலைச்சுற்றல் (Dizziness) தலைவலி ஏற்பட்டாலோ, பார்வை மங்கலாக இருந்தாலோ அல்லது சேரில் இருந்து எழுந்திருக்கும்போது கிறுகிறுவென வந்தாலோ, அதை எப்போதும் அசால்ட்டாக விடக்கூடாது. இது பலரும் பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இதற்குப் பின்னால் ஒரு மருத்துவ காரணங்கள் இருக்கலாம். இந்த பிரச்சனைக்கு ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் அல்லது போஸ்டரல் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் திடீரென்று உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் இருந்து எழுந்திருக்கும்போது உடலால் இரத்த அழுத்தத்தை விரைவாக சரிசெய்ய முடியாதபோது இது நிகழ்கிறது. மேலும், மூளைக்கு இரத்த விநியோகம் குறையும். இதனால்தான் உங்களுக்கு தலைச்சுற்றல், மங்கலான பார்வை (Blurred Vision) அல்லது மயக்கம் போன்றவை ஏற்படும்.

ALSO READ: பெண்களிடையே அதிகரிக்கும் PCOS பிரச்சனை.. காரணம் என்ன..?

காரணம் என்ன..?

நாம் எழுந்தவுடன், ஈர்ப்பு விசை காரணமாக கால்களுக்கு இரத்தம் விரைகிறது. பொதுவாக, உடலின் தன்னியக்க நரம்பு மண்டலம் நரம்புகளை சுருக்கி இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலம் உடனடியாக ஈடுசெய்ய முயற்சிக்கும். இதனால், தலைச்சுற்றல் ஏற்படலாம். இதன் காரணமாக, நிறைய தண்ணீர் குடிப்பது, எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பது மற்றும் மெதுவாக எழுந்து நிற்பது போன்ற செயல்கள் பிரச்சனையை குறைக்கும்.

இது ஏன் நடக்கிறது?

நீரிழப்பு, இரத்த சோகை, நீண்ட படுக்கை ஓய்வு, சில மருந்துகள் மற்றும் வயதானவுடன் தொடர்புடைய உடல் அனிச்சை குறைதல் ஆகியவை தலைச்சுற்றலை ஏற்படுத்தும். நின்ற முதல் நிமிடத்தில் திடீரென இரத்த அழுத்தம் குறைவது டிமென்ஷியா அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதாவது, திடீரென்று நின்ற 30 வினாடிகளுக்குள் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 20 mmHg அல்லது அதற்கு மேல் குறையும் நபர்களுக்கு எதிர்காலத்தில் டிமென்ஷியா உருவாகும் அபாயம் அதிகம் என்று கண்டறியப்பட்டது.

ALSO READ: உடலில் இந்த பிரச்சனைகள் இருக்கா? பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது!

ஒரு நபர் நிற்கும்போது அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது முக்கியம். அதன்படி, உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். நீங்கள் இதை தொடர்ந்து புறக்கணிக்கும்போது, உங்களுக்கு எலும்பு முறிவு மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, மெதுவாக எழுந்து நிற்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, உங்கள் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, கவனத்துடன் இருப்பது போன்ற ஏற்பாடுகளைச் செய்வது, தேவைப்பட்டால், உங்கள் மருந்துகளை ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். சரியான நேரத்தில் கவனம் செலுத்தினால், இந்தப் பிரச்சனையை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நாம் இதை சரிசெய்ய முடியும்.

ஐரோப்பாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: என்னென்ன தெரியுமா?
இனி ரூ.25,000 முதல் உடனடி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் - எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு
மது இல்லாத திருமணங்களுக்கு ரூ.51,000 பரிசு - உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
கால்வாயில் விழுந்த கார்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..