லியோ படத்தின் இண்டர்வல் சீன் முன்னாடி யோசிச்சது வேற – இயக்குநர் ரத்னகுமார் ஓபன் டாக்

Director Rathna kumar talks about Leo movie: தமிழ் சினிமாவில் இயக்குநரகாவும், திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வருபவர் இயக்குநர் ரத்னகுமார். இவரது இயக்கத்தில் தற்போது 29 என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லியோ படத்தின் இண்டர்வல் சீன் முன்னாடி யோசிச்சது வேற - இயக்குநர் ரத்னகுமார் ஓபன் டாக்

லியோ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயுடன் படக்குழுவினர்

Published: 

22 Apr 2026 20:57 PM

 IST

தமிழ் சினிமாவில் மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகியப் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் ரத்னகுமார். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் 29 என்ற படம் உருவாகி உள்ளது. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் வருகின்ற 8- ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விது நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ், ஜி ஸ்குவாட் மற்றும் இன்வெனியோ ஆரிஜின் சார்பாக தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ் மற்றும் அலங்கார பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அப்படி ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குநர் ரத்னகுமார் லியோ படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சம்மர் வெக்கேஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சு… குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான இந்த ஃபைண்டிங் நீமோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்

லியோ படத்தின் இண்டர்வல் சீன் குறித்து பேசிய ரத்னகுமார்:

Also Read… Karthi: நா லவ் பண்ணக்கூடாதுனு வீட்ல மிரட்டுனாங்க.. நடிகர் கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..