நான் இயக்குநரின் கலைஞராக இருக்கவே விரும்புகிறேன் – நடிகை நிமிஷா சஜயன்!
Actress Nimisha Sajayan: மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நிமிஷா சஜயன் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான டிஎன்ஏ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நிமிஷா சஜயன்
கோலிவுட் சினிமாவில் கடந்த 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவரும் படம் டிஎன்ஏ. நடிகர் அதர்வா (Actor Atharva) நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை நிமிஷா சஜயன் (Actress Nimisha Sajayan) நாயகியாக நடித்துள்ளார். டிஎன்ஏ படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகை நிமிஷா சஜயன் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி நடிகை நிமிஷா சஜயன் பேசியதாவது, ”நான் நடிக்கின்ற ஒவ்வொரு படம் வெளியாகும் போது அது ஹிட் அடிக்குமா இல்லையானு எனக்குள்ள ஒரு பதட்டம் இருக்கும். ஆனால் டிஎன்ஏ படத்தை நடித்து முடித்தப் பிறகு இந்தப் படத்தின் மீது எனக்கு இருந்த நம்பிக்கை என்னை பதட்டம் அடையாமல் பார்த்துக்கொண்டது.
அடுத்த நாள் படம் ரிலீஸ் இருந்தா எனக்கு தூக்கம் வராது ஆனால் டிஎன்ஏ படத்தின் மீதான எனது நம்பிக்கையில் நான் போய் நல்லா தூங்கிட்டேன். மறுநாள் காலையில இயக்குநர் நெல்சன் கால் பன்னி படம் ஹிட்டுனு சொன்னப்போ ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. இந்தப் படத்தில் நான் சிறப்பாக நடிச்சு இருக்கேன்னு எல்லாரும் பாராட்டுறாங்க.
அந்த பாராட்டு எல்லாம் இயக்குநர் நெல்சனைதான் சேறும். அவர் என்ன சொன்னாறோ அதைதான் நான் இந்தப்ப் படத்தில் நடித்தேன். மேலும் எனக்கு எப்போது நான் ஒரு இயக்குநரின் கலைஞராகவே இருக்க விரும்புவேன் என்றும் நடிகை நிமிஷா சஜயன் அந்த விழாவில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதர்வா மற்றும் நெல்சன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிமிஷா:
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வரவேற்பைப் பெறும் டிஎன்ஏ படம்:
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான டிஎன்ஏ படம் குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. காதல் தோல்வியில் இருக்கும் நாயகன் அதர்வாவிற்கும், மா நிறமாக இருப்பதால் திருமணத்திற்கு நீண்ட நாட்களாக மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கும் நாயகி நிமிஷா சஜயனுக்கும் திருமணம் நடைபெருகின்றது.
அதன்பிறகு இவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. பிரசவம் முடிந்து மயக்கம் தெளிந்து பார்க்கும் நாயகி தான் பிரசவத்தின் போது பார்த்த குழந்தை இது இல்லை என்றும் எனது குழந்தையை மாற்றிவிட்டார்கள் என்றும் கூறிகிறார். அதனை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஏற்க மறுக்கும் நிலையில் கணவர் அதர்வா மட்டும் மனைவிக்கு ஆதரவாக இருக்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. குழந்தை காணாமல் போனதா? அப்படியானால் யார் அந்த குழந்தையை கடத்தினார்கள் என்பதை அதர்வா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படத்தின் மீதி கதை ஆகும்.