Tamil Nadu Election 2026 Live: நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.. தீவிர வாக்குசேகரிப்பில் அரசியல் தலைவர்கள்!

Tamil Nadu Election 2026 Live: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Election 2026 Live:  நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.. தீவிர வாக்குசேகரிப்பில் அரசியல் தலைவர்கள்!

Tamil Nadu Assembly Election 2026

Updated On: 

20 Apr 2026 10:40 AM

 IST

LIVE NEWS & UPDATES

  • 20 Apr 2026 10:25 AM (IST)

    பணக்கார வேட்பாளர்கள் லிஸ்ட்

    1. ஜோசப் விஜய் ( தவெக) – சொத்து மதிப்பு ரூ.648 கோடி. ( பெரம்பூர்- திருச்சி கிழக்கு தொகுதி).
    2. ஆதவ் அர்ஜுனா ( தவெக) – சொத்து மதிப்பு ரூ 534 கோடி. ( வில்லிவாக்கம் தொகுதி).
  • 20 Apr 2026 10:12 AM (IST)

    பணக்கார வேட்பாளர்கள் யார் யார்

    தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்டதை அடுத்து பணக்கார வேட்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். முதலிடத்தில்

    1. லீமா ரோஸ் மார்ட்டின் (அதிமுக) – சொத்து மதிப்பு: ரூ.5,863 கோடி. ( லால்குடி தொகுதி).
  • 20 Apr 2026 09:55 AM (IST)

    டிக்ளரேஷன் அபவுட் ஏஜ் என்றால் என்ன?

    வாக்காளர் ஒருவர் 18 வயது குறைந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால் அந்த வாக்காளரிடம் (டிக்ளரேஷன் அபவுட் ஏஜ்) இணைப்பு -7 என்ற படிவத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

  • 20 Apr 2026 09:46 AM (IST)

    வாக்காளரை அனுமதிக்கும் முறை

    பின்னர், வாக்காளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்குச்சாவடி முகவர் அளித்த ஆட்சேபனை தவறு எனும் பட்சத்தில் வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

  • 20 Apr 2026 09:26 AM (IST)

    வாக்காளர் அடையாளம் சந்தேகம்

    வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஒருவரின் அடையாளம் பற்றி ஏதேனும் வாக்குச்சாவடி முகவருக்கு ஆட்சேபனை இருந்தால், அவரிடம் ரூ.2 சேலஞ்ச் கட்டணம் பெற வேண்டும். அதற்கான ரசீதையும் வழங்க வேண்டும்

  • 20 Apr 2026 09:18 AM (IST)

    சேலஞ்ச் ஓட்டு பற்றி தெரியுமா?

    வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அடையாளத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சேலஞ்ச் ஓட்டு குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • 20 Apr 2026 09:12 AM (IST)

    முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசப்போகும் விஷயம் இதுதான்..

    இரண்டு நாள் பயணத்தின் போது நடைபெறும் பொதுக்கூட்டங்களில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் சாதனைகள், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த 131வது சட்டத் திருத்த மசோதா குறித்து மக்களிடம் எடுத்துரைத்து சிறப்புரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • 20 Apr 2026 08:47 AM (IST)

    தமிழகம் வரும் ஆந்திரா முதல்வர்..

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தருகிறார். கோவை, சென்னை, மதுரை, சாத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

  • 20 Apr 2026 08:06 AM (IST)

    சென்னையில் மட்டும் 4000 ரவுடிகள்.. அதிரடி ஆக்‌ஷனில் போலீசார்..

    தலைநகரமான சென்னையில் மட்டும் 4 ஆயிரம் ரவுடிகள் உள்ளனர். இவர்கள், தேர்தல் நாளில் வாக்குப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சட்டவிராத செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. எனவே, அவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து தேடி வருகின்றனர்.

  • 20 Apr 2026 07:51 AM (IST)

    நெருங்கும் தேர்தல்.. ரவுடிகளின் பட்டியலை கையில் எடுத்த போலீஸ்..

    சென்னை உள்பட 38 மாவட்டங்களில் முக்கிய ரௌடிகள் குறித்த பட்டியலை காவல்துறை கையில் எடுத்துள்ளது. அதன்படி, அந்த ரவுடிகள் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 வகைகளாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளனர். அந்த பட்டியலின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ரவுடிகள் செயல்பாடுகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

  • 20 Apr 2026 07:39 AM (IST)

    தவெக தலைமை மக்களுக்கு அறிவுறுத்தல்..

    விஜய்யின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள், விஜயின் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்தவித வாகனங்களிலும் பின்தொடரக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • 20 Apr 2026 07:16 AM (IST)

    சென்னை திருவள்ளூரில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய்..

    ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய இரண்டு மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வழிபாட்டு தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைக்காக மீண்டும் ஏப்ரல் 20 அன்று தமிழகம் வருகை தரவிருக்கிறார். சென்னையின் வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 20 அன்று  தலைவர் விஜய் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் விவாகரத்து வழக்கு ஏப்ரல் 20 அன்று விசாரணைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவர் நேரில் ஆஜராவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..