India – Pakistan Conflict : பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

Stock Market Crash, Sensex and Nifty Plunge | இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக பதற்றம் நீடித்து வருகிறது. அதன் எதிரொலியாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதலால் பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தையும் சரிவை சந்தித்துள்ளது.

India - Pakistan Conflict : பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

09 May 2025 17:06 PM

சென்னை, மே 09 : இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே போர் பதற்றம் நிலவுவதால் இந்திய பங்குச்சந்தை (Indian Share Market) இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் காரணமாக பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் சவாலை சந்தித்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தையில் இரண்டாவது நாளாக சிறிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் பங்குச்சந்தையை எவ்வாறு பாதித்துள்ளது, இன்றைய பங்குச்சந்தையின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே வெடித்த மோதல்

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தான் பயங்கரவாத குப்மலால் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – பங்குச்சந்தையில் எதிரொலி

இந்தியா பாகிஸ்தான் காரணமாக பங்குச்சந்தை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை சற்று சரிவை சந்தித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் காரணமாக நேற்று (மே 08, 2025) கராச்சி பங்குச்சந்தையின் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் பாதிப்படைந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை சற்று சரிவை சந்தித்தது. அதன்படி நேற்று மட்டும் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தகம் நடைபெற்றது.

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன?

நேற்று ( மே 08, 2025) இந்திய பங்குச்சந்தை 400 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துள்ள நிலையில், இன்று ( மே 09, 2025) சென்செக்ஸ் 544 புள்ளிகள் சரிந்து 79,084 புள்ளிகளாக வர்த்தகமானது. இதேபோல, பங்குச்சந்தை நிப்டி 83 புள்ளிகள் சரிந்து 24,130 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.