‘ஈரான் தலைவரை கொல்வதே ஒரே தீர்வு’ இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்… மத்திய கிழக்கில் பதற்றம்

Israel Iran Conflict : இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த மோதலில் இருநாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலியை கொலை செய்வதே ஒரே தீர்வு என இஸ்ரேல் பிரதர் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஈரான் தலைவரை கொல்வதே ஒரே தீர்வு இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்...  மத்திய கிழக்கில்  பதற்றம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - ஈரான் தலைவர் அயதுல்லா அலி

Updated On: 

17 Jun 2025 07:34 AM

இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதலை (Israel Iran Conflict) முடிவுக்கு கொண்டு வர, ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்ல அலியை (Ayatollah Ali Khamenei) கொலை செய்வதே ஒரே தீர்வு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Israel PM Benjamin Netanyahu)  கூறியுள்ளார். கடந்த 4 நாட்களாக இஸ்ரேல் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனல். இதில் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், அதிகாரிகளும் உயிரிழந்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானின் ஆணு ஆயுத நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் ஆணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அதனை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. இதுகுறித்து, அமெரிக்காவிடம் ஈரான் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது.

‘ஈரான் தலைவரை கொல்வதே ஒரே தீர்வு’

ஈரான் ஆணு ஆயுதங்களை உருவாக்கிவிட்டால் தங்கள் நாட்டுக்கே ஆபத்தாக முடியும் என இஸ்ரேல் கருதுகிறது. அதனால், அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தற்போது இஸ்ரேல் இறங்கியுள்ளது.  இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இப்படியான சூழலில், இஸ்ரேல் பிரதமர் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ” ஈரான் விரும்புவது என்றென்றும் போர் தான். அவர்கள் நம்மை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குக் கொண்டு வருகிறார்கள்.

உண்மையில், இஸ்ரேல் இந்த ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது தான் நோக்கம். மேலும் தீய சக்திகளை எதிர்த்து நிற்பதன் மூலம் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரைவான வழி ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்வதே தீர்வு” என கூறியுள்ளார்.

அமெரிக்கா சொன்ன விஷயம்

ஏற்கனவே, ஈரான் தலைவர் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதனை அமெரிக்கா கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, பேசிய இஸ்ரேல் பிரதமர், “அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டது. ஈரான் ஆணு ஆயுதங்களை தயாரிப்பதை எதிர்ப்பதில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

இது ஈரானுக்கு பிடிக்கவில்லை” என கூறினார். இதற்கிடையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறுகையில், “நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்ததத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித வாழ்க்கையை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது.

நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும். ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்கக்கூடாது. இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு” என்று கூறியுள்ளார்.