AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹார்முஸ் நீரிணையில் புதிய கடல்வழிப்பாதை.. நெருக்கடியில் தப்பிய இந்தியக் கப்பல் உட்பட 4 சரக்குக் கப்பல்கள்!!

Cross Strait Of Hormuz Via New Shipping Route: பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் தனது கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஹார்முஸ் நீரிணையில் புதிய கடல்வழிப்பாதை.. நெருக்கடியில் தப்பிய இந்தியக் கப்பல் உட்பட 4 சரக்குக் கப்பல்கள்!!
ஹார்முஸ் நீரிணை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 Apr 2026 12:49 PM IST

உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஒரு நம்பிக்கையூட்டும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஈரான் மற்றும் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான மோதலால் முடங்கியுள்ள ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz), வணிகக் கப்பல்களுக்காக ஒரு புதிய வழிப்பாதை உருவாகியுள்ளது.

புதிய பாதையின் முக்கியத்துவம்:

இதுகுறித்து கிடைத்த தகவல்கள்படி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிச் சென்ற நான்கு பெரிய கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச கடல் பகுதிகளைத் தவிர்த்து, ஓமன் நாட்டின் கடல் எல்லைக்குள் பயணித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க கப்பல்கள் கண்டுபிடித்துள்ள ஒரு மாற்று வழியாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: போர் இன்னும் முடிவடையவில்லை.. சில வாரங்கள் தொடரும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

பயணித்த கப்பல்கள் எவை?

மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் 3-ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பின்வரும் கப்பல்கள் இந்தப் புதிய பாதையைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

அதன்படி, மார்ஷல் தீவுகள் கொடியுடன் வந்த ஹப்ருத் & தல்குத் ஆகிய இந்த இரு பெரும் எண்ணெய் டேங்கர்களும் தலா 20 லட்சம் பேரல் சவுதி மற்றும் அமீரக கச்சா எண்ணெயைச் சுமந்து வந்துள்ளன. பனாமா கொடியுடன் வந்த சோஹர் (Sohar) என்ற இந்த எல்என்ஜி (LNG) கப்பல் அமீரகத்தில் இருந்து புறப்பட்டது.

இந்தியக் கொடியுடன் பயணித்த எம்எஸ்வி குபா (MSV Quba) என்ற இந்தச் சரக்குக் கப்பல் மார்ச் 31-ம் தேதி துபாயில் இருந்து புறப்பட்டு, ஓமன் நாட்டின் திப்பா (Dibba) துறைமுகத்திற்கு அருகே தென்பட்டது. இந்தக் கப்பல்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா அருகே ஓமன் கடல் எல்லைக்குள் நுழைந்து, தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர்களை அணைத்துவிட்டு ரகசியமாகப் பயணித்துள்ளன.

ஈரானின் ‘சுங்கச் சாவடி’ கட்டுப்பாடுகள்:

பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் தனது கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், தனது கடல் எல்லைக்குள் செல்லும் கப்பல்களுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு 1 டாலர் வீதம் வரி வசூலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நெருக்கடியான ‘சுங்கச் சாவடி’ முறையைத் தவிர்க்கவே கப்பல்கள் ஓமன் எல்லைக்குள் புகுந்துள்ளன.

பின்னணி மற்றும் பாதிப்பு:

உலக எரிசக்தி விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இந்தியாவின் எரிசக்தித் தேவையிலும் இந்தப் பாதை முக்கியப் பங்கு வகிக்கிறது. சமீபத்தில் ஈரானின் பிரதான கடற்படைத் தளமான ‘கேஷ்ம்’ (Qeshm) பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில்தான் இந்தக் கப்பல்கள் பாதுகாப்பாகப் புதிய பாதையில் கடந்துள்ளன. இந்த புதிய வழிப்பாதை, சர்வதேச கடல் போக்குவரத்து நெரிசலையும், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஓரளவிற்குக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us