அனுமதியின்றி கிரானைட் கடத்தி வந்த இரு லாரி பறிமுதல்
கனிமவளத்துறை தனி வருவாய் ஆய்வாளர் பாலாஜி என்பவர் நாட்றம்பள்ளி அடுத்த ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடியான கொத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில். அனுமதியின்றி கிரானைட் கடத்தி வந்தது தெரிய வந்தது.
கனிமவளத்துறை தனி வருவாய் ஆய்வாளர் பாலாஜி என்பவர் நாட்றம்பள்ளி அடுத்த ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடியான கொத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில். அனுமதியின்றி கிரானைட் கடத்தி வந்தது தெரிய வந்தது.பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் இரு லாரி ஓட்டுனர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். மேலும் நாட்றம்பள்ளி போலீசருக்கு கனிமவளத் துறை ஆய்வாளர் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 8 யூனிட் கொண்ட கிரானைட் மற்றும் இரு லாரிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
Follow Us
Latest Videos
