Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீராணம் ஏரியில் பொங்கி வரும் தண்ணீர்… விவசாயிகள், மக்கள் அச்சம்

Chemical contamination Veeranam Lake: கடலூர் மாவட்ட வீராணம் ஏரியில் தண்ணீரில் நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏரியில் ரசாயனம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு போலவே, தண்ணீர் மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை, பச்சை நிறம் நீர்நிலை தாவரங்களால் ஏற்பட்டது எனக் கூறியுள்ளது.

வீராணம் ஏரியில் பொங்கி வரும் தண்ணீர்… விவசாயிகள், மக்கள் அச்சம்
வீராணம் ஏரியில் நுரை பொங்கி வரும் நீர் Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 04 May 2025 10:37 AM

கடலூர் மே 04: கடலூர் மாவட்ட வீராணம் ஏரியில் (Veeranam Lake) , தண்ணீரில் நுரை பொங்கும் நிலை காணப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் (Public and Farmers) அதிர்ச்சியில் உள்ளனர். ஏரியில் ரசாயனங்கள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், மக்கள் நீரை பயன்படுத்த தயங்குகின்றனர். கடந்த ஆண்டு போலவே, தற்போதும் அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை பரிசோதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை, பச்சை நிறம் நீர்நிலைகளில் உள்ள தாவரங்களால் ஏற்பட்டதாக கூறியுள்ளது. சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் மூன்று அடுக்கில் பரிசோதிக்கப்பட்ட பிறகு அனுப்பப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாசனத்துக்கும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரம்

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடியில் தொடங்கும் வீராணம் ஏரி, 14 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் கொண்டது. இந்த ஏரி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 54,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீராகவும், சென்னை மாநகரத்திற்கு குடிநீராகவும் பயன்படுகிறது.

பச்சை தண்ணீர் காரணமாக தண்ணீர் வரத்து நிறுத்தம்

கடந்த 5 நாட்களுக்கு முன்பு, வடவாற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர் வந்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், வீராணம் ஏரிக்கு நீர் வரத்தை தற்காலிகமாக நிறுத்தினர். தற்போது ஏரியின் முழு கொள்ளளவு 48.50 அடி எனில், 44 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

கரையோரங்களில் நுரை: ரசாயன கலப்புக்கு சந்தேகம்

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, ஏரியின் கரையோரங்களில் தண்ணீரில் நுரை அதிகமாக பொங்கி காணப்படுகிறது. இதனால், ஏரியில் ரசாயனங்கள் கலந்திருக்கலாம் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக, ஏரியின் நீரை கால்நடைகள் குடிப்பதற்கும், வீட்டு பயன்பாட்டுக்கும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பரிசோதனைகள் மற்றும் கோரிக்கை

கடந்த ஆண்டு தண்ணீர் பச்சை நிறமாக மாறியபோது, சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நீர் ஆய்வு துறை சார்பில் தண்ணீர் எடுத்துச் சென்று பரிசோதிக்கப்பட்டது. அதுபோல், தற்போது மீண்டும் அதிகாரிகள் துரிதமாக தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் அச்சத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நீர் தரத்தை உறுதி செய்ய வேண்டிய அவசியம்

பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரியில் பச்சை நிறம் மற்றும் நுரை உருவாகும் காரணம் பச்சை நீர்க் களைகள் மற்றும் நீர்நிலைச் செடிகள் என்றும், தினமும் நீர் தரம் பரிசோதிக்கப்படுவதாகவும், சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீர் மூன்று முறை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தற்போது காணப்படும் நுரை மற்றும் புகார்களை மையமாக கொண்டு மீண்டும் விரைவான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்றே பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த சூழலில், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் விரைவில் தக்க நடவடிக்கைகளை எடுத்து, நீர் தரம் குறித்து தெளிவான தகவலை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விஜயுடன் கைகோர்க்கும் தேமுதிக? முடிவு எடுக்கும் பிரேமலதா!
விஜயுடன் கைகோர்க்கும் தேமுதிக? முடிவு எடுக்கும் பிரேமலதா!...
ஓவர் சைஸ் ஆடைகளை ஸ்டைலாக அணிவது எப்படி?
ஓவர் சைஸ் ஆடைகளை ஸ்டைலாக அணிவது எப்படி?...
விடிந்தால் நீட் தேர்வு.. மாணவி எடுத்த விபரீத முடிவு!
விடிந்தால் நீட் தேர்வு.. மாணவி எடுத்த விபரீத முடிவு!...
வழிகாட்டும் சுபகிரங்கள்.. இந்த 6 ராசிக்கு 2025 முழுக்க லக் தான்
வழிகாட்டும் சுபகிரங்கள்.. இந்த 6 ராசிக்கு 2025 முழுக்க லக் தான்...
த்ரிஷாவின் நடிப்பில் வெளியான பெஸ்ட் படங்களின் லிஸ்ட் இதோ!
த்ரிஷாவின் நடிப்பில் வெளியான பெஸ்ட் படங்களின் லிஸ்ட் இதோ!...
சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்த இருவர் பலி
சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்த இருவர் பலி...
சிங்கப்பூர் தேர்தல்.. 14வது முறையாக ஆட்சியை பிடித்த ஆளுங்கட்சி!
சிங்கப்பூர் தேர்தல்.. 14வது முறையாக ஆட்சியை பிடித்த ஆளுங்கட்சி!...
தர்மசாலாவில் தடம் பதிக்குமா PBKS? என்ன திட்டத்தில் LSG..?
தர்மசாலாவில் தடம் பதிக்குமா PBKS? என்ன திட்டத்தில் LSG..?...
ரெட்ரோ படத்தை ரஜினியிடம் காட்ட திட்டமிட்டுள்ள இயக்குநர்
ரெட்ரோ படத்தை ரஜினியிடம் காட்ட திட்டமிட்டுள்ள இயக்குநர்...
அக்னி நட்சத்திரம்.. நாம் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
அக்னி நட்சத்திரம்.. நாம் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?...
வீராணம் ஏரியில் நுரை பொங்கி வரும் நீர்! விவசாயிகள், மக்கள் அச்சம்
வீராணம் ஏரியில் நுரை பொங்கி வரும் நீர்! விவசாயிகள், மக்கள் அச்சம்...