கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை.. காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு

Kodaikanal Tourist Entry Ban : யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொடைக்கானலில் சில சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை.. காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு

கொடைக்கானல்

Published: 

27 Jun 2025 14:10 PM

திண்டுக்கல், ஜூன் 27 : கொடைக்கானலில் ( (Kodaikanal) யானைகள் நடமாட்டம் இருப்பதால் பயணிகள் பாதுகாப்பு கருதி, சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. குணா குகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் (Kodaikanal Tourist Entry Ban) செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்உலக புகழ் பெற்ற சுற்றுலா தளம் ஆகும். ஊட்டிக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் பிரபல சுற்றுலா தளமாக கொடைக்கானல் விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். குறிப்பாக, வார இறுதி நாட்கள், கோடை விடுமுறை போன்ற நாட்களில் சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார். அங்கு இருக்கும் கிளைமெட், பிரமியமான காட்சிகளை பார்ப்பதற்காக வேறு வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மக்கள் படையெடுத்து வருகின்றனர். கொடைக்கானலில் ஏரிகள், குகைகள், மலர்ப்பூங்காக்கள், பைன் மரக்காடு உள்ளிட்ட பல்வேறு இயற்கை அழக நிறைந்த இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

அதே நேரத்தில், கொடைக்கானாலில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொது மக்கள் பயன்படுத்தும இடங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.  இதனால், சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருப்பினும், கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் யானைகள் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் வனத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.  அதன்படி, பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

காரணம் தெரியுமா?

யானைகளில் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இந்த தடை விதிக்கப்படுவதாகவும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்கவும், கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறும் சுற்றுலாப் பயணிகளை வன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நிலைமையைக் கண்காணிக்கவும், இணக்கத்தை உறுதி செய்யவும் ரோந்து பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, கொடைக்கானலில் கனராக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மலைப் பகுதியில் அனுமதி இல்லாமல், ஜேசிபி, ஹிட்டாட்சி, பொக்லைன் உள்ளிட்ட கனராக வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என கோட்டாட்சியர் அறிவித்திருந்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அனுமதியின்று கனரக வாகனங்கள் இயக்கப்பட்டதற்கு ரூ.9 லட்சம் அபராதம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் கோட்டாட்சியர் தெரிவித்தார்.