அரசுப் பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
Minister Sivasankar : தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், டீசல் விலை ஏற்றப்பட்ட நேரத்திலும் பேருந்து கட்டணம் உயரவில்லை என்றும் இப்போதும் உயர்த்த மாட்டோம் என்று கூறினார்.

சென்னை, ஜூன் 03 : தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் (tamilnadu transport fee) உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் (Minister sivasankar) தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், ” டீசல் விலை ஏற்றப்பட்ட நேரத்திலும் பேருந்து கட்டணம் உயரவில்லை. இப்போதும் உயர்த்த மாட்டோம் என்று தெளிவுபடுத்துகிறேன்” என்று கூறினார். தமிழகத்தில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது போக்குவரத்து சேவை. பல்வேறு மாவட்டங்களுக்கும் குறைந்த செலவில் தமிழக அரசு போக்குவரத்து சேவையை செயல்படுத்தி வருகிறது. இதனால், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் இருக்கும். இதனால், பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பேருந்து கட்டணம் உயர்வா?
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அரசு பேருந்து கட்டணம் உயர்வதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது உண்மையா என்ற குழப்பத்திலும் இருந்தனர்.
இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு என்பது இருக்காது. ஆனால், தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், நீதிமன்றம் மக்களிடம் கருத்தை கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்களிடம் பேருந்து கட்டணம் உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் சிவசங்கர் பேட்டி
அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட கூடாது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கியிருக்கிறார். டீசல் விலை ஏற்றப்பட்ட நேரத்திலும் பேருந்து கட்டணம் உயரவில்லை. இப்போதும் உயர்த்த மாட்டோம் என்று தெளிவுபடுத்துகிறேன்.
– மாண்புமிகு அமைச்சர் திரு @sivasankar1ss அவர்கள்… pic.twitter.com/IfIhDNWiA3
— DMK IT WING (@DMKITwing) June 3, 2025
அரசிற்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தும் நிலைபாடு இல்லை. அரசை பொறுத்தவரை பொது மக்கள் மிது சுமையை ஏற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். கடந்த காலங்களில் டீசல் விலை உயர்த்தும்போது கூட, தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை.
இன்று சர்வதே சந்தையில் டீசல் விலை குறைந்தபோதிலும், மத்திய அரசு டீசல் விலையை குறைக்க முன்வருவதில்லை. இருந்தாலும், பொதுமக்கள் மீது சுமை ஏறக்கூடாது என்ற காரணத்தினால் தமிழக அரசு போக்குவரத்து கட்டணத்தை உ யர்தாது” என்று கூறினார்.