தமிழ்நாடு அரசு விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது?

Tamil Nadu SC/ST Hostel Scholarships: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2025-26 கல்வியாண்டிற்கு இலவச விடுதி வசதியை அறிவித்துள்ளது. ரூ.2.50 லட்சத்திற்குள் குடும்ப வருமானம் உள்ள மாணவர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, ஐடிஐ, டிப்ளோமா மற்றும் கல்லூரிகளில் பயிலும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது?

விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க இணையவழி விண்ணப்பம்

Updated On: 

13 Jun 2025 09:26 AM

சென்னை ஜூன் 13: 2025–2026 கல்வியாண்டுக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (Adi Dravidar and Tribal Welfare Department) மூலம் இயங்கும் பள்ளி, ஐடிஐ, டிப்ளோமா மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு (School, ITI, diploma and college students)விடுதிகளில் (Free Hostel) கட்டணமில்லாமல் தங்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரூ.2.50 லட்சத்துக்குள் குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவர்கள் மட்டுமே தகுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வது அவசியம். இணையதளம் https://nallosai.tn.gov.in/ மூலம் 2025 ஜூன் 10 முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு, 1800-599-7638 என்ற இலவச தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

விடுதிகளில் கட்டணமின்றி தங்கிப் படிக்க எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 2025–2026 கல்வியாண்டுக்காக விடுதிகளில் கட்டணமின்றி தங்கிப் படிக்கும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, ஐ.டி.ஐ., டிப்ளோமா மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் இதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். இவ்வசதி பெற, மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஜூன் 10, 2025 முதல் விண்ணப்பங்கள் இணையதள முகவரியான https://nallosai.tn.gov.in மூலம் பெறப்படுகிறது.

செய்தி வெளியீடு

மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கல்

மேலும், மாணவர்களுக்கு உதவியாக 1800-599-7638 என்ற இலவச தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அலுவலக நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை) தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் புதிய அப்டேட்டுகளாக, “Social Labs” மற்றும் “Learn-a-Lot” என்ற பயிற்சி திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு தொழில் முனைவுத் திறன்கள், ஆங்கிலம், கணினி மற்றும் அறிவியல் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இத்துடன், 60 புதிய விடுதிகள் (₹300 கோடியில்) கட்டப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கு பல நவீன வசதிகள் ஏற்பாடு

பழைய விடுதிகளும் மேம்படுத்தப்பட்டு, டிஜிட்டல் நூலகம், CCTV, biometric வசதிகள், மற்றும் மத்திய சமையலறை போன்ற பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, அரசின் இந்த திட்டம் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற உதவும் வகையில் பயனளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (Adi Dravidar and Tribal Welfare Department) என்பது சமூகத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் (Scheduled Castes – SC) மற்றும் பழங்குடியினர் (Scheduled Tribes – ST) மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக இயங்கும் ஒரு முக்கிய அரசுத்துறை ஆகும்.