டிரெண்டான கூமாப்பட்டி கிராமம்.. பிளவக்கல் அணைக்கு செல்ல தடை.. வெளியான அறிவிப்பு

koomapatti Pilavakkal Dam : விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி கிராம் அருகே உள்ள பிளவக்கல் அணைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கூமாப்பட்டி கிராமத்திற்கு அருகே பிளவக்கல் அணைக்கு பொது மக்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது

டிரெண்டான கூமாப்பட்டி கிராமம்.. பிளவக்கல் அணைக்கு செல்ல தடை.. வெளியான அறிவிப்பு

கூமாப்பட்டி கிராமம்

Updated On: 

28 Jun 2025 19:39 PM

 IST

விருதுநகர், ஜூன் 28 : இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. முன்னதாக, கூமாப்பட்டிக்கு வர வேண்டும் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தி இருந்த நிலையில், தற்போது பிளவக்கல் அணைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலுட் டிரண்டிங்கில் இருப்பது கூமாப்பட்டி கிராமம். இந்த கூமாப்பட்டி கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கூமாப்படி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே பிளவக்கல், கோவிலாறு அணைகள் உள்ளன. பரந்து விரிந்த பசுமைப் புல்வெளிகள், சுற்றி இருக்கும் மலைகள் ஒட்டுமொத்த கூமாப்பட்டியை ரம்மியாக வைத்திருக்கின்றன.

கூமாப்பட்டி கிராமம்

குறிப்பாக, மலைக்காலங்களில் இந்த கிராமம் அழகாக காட்சிகளிக்கும். ஆனால், வெயில் காலங்களில் வறண்டு போகி இருக்கும். இப்படியான சூழலில், கூமாப்பட்டி கிராமம் குறித்து இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்ததில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

கூமாப்பட்டி வாங்க என்று அழைக்கும் வீடியோ தான் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் மன அழுத்தமா? விடுமுறை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டி வாங்க. தனித்தீவு போல இருக்கிறது என தெரிவித்திருந்தார். அதோடு, கூமாப்பட்டி கிராமத்தின் அழகையும் அவர் காண்பித்தார்.

கூமாப்பட்டி கிராமம் ரீல்ஸ்

படையெடுக்கும் மக்கள்

இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதனை அடுத்து, கூமாப்பட்டி எங்கு இருக்கு. எப்படி போவது என பலரும் கூகுளில் தேட ஆரம்பித்தனர். பொது மக்கள் பலரும் பச்சை பசேலன வயல்வெளிகள் நிறைந்திருக்கும் அந்த கிராமத்தை பார்க்க வர தொடங்கி உள்ளதாக தெரிகிறது.  ஆனால், வீடியோக்களில் பார்ப்பது போன்று நேரில் இல்லை எனவும் நெட்டிசன்கள் பலரும் போட்டோ பதிவிட்டு புலம்பி வருகின்றனர்.

மழைக்காலங்களில் மட்டுமே கூமாப்பட்டி கிராமம் ரம்மியமாக இருக்கும். வீடியோவை பார்த்து மக்கள் சென்று ஏமாற்றம் அடைந்தனர். இதனால், பொதுப்பணித்துறையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி, கூமாப்பட்டி யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சூழலில், மீண்டும் ஒரு அறிவிப்ப பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அறிவிப்பு

அதன்படி, “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி யாரும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம். தடையை மீறி யாரும் நுழைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பிளவக்கல் அணைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் தடை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.  சில நாட்களாக கூமாப்பட்டி கிராமத்திற்கு அருகே பிளவக்கல் அணைக்கு பொது மக்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
கொலை, கொள்ளை, போதை… தமிழகத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறி
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..