நாம் தமிழர் கட்சி நடத்தும் ஆடு மாடுகள் மாநாடு.. மதுரை விராதனூரில் ஏற்பாடுகள் தீவிரம்..

NTK Leader Seeman: மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பின் கீழ் ஜூலை 10 2025 ஆம் தேதியான இன்று மாலை மதுரை விராதனூர் அருகே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆடு மாடுகள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

நாம் தமிழர் கட்சி நடத்தும் ஆடு மாடுகள் மாநாடு.. மதுரை விராதனூரில் ஏற்பாடுகள் தீவிரம்..

கோப்பு புகைப்படம்

Published: 

10 Jul 2025 08:40 AM

 IST

மதுரை, ஜூலை 10, 2025: மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று அதாவது ஜூலை 10 2025 ஆம் தேதியான இன்று மதுரையில் ஆடு மாடுகளுடன் மாநாடு நடத்தப்படுகிறது. மதுரை விராதனுர் பகுதியில் மாலை 5 மணிக்கு இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த மாநாட்டிற்காக நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த பத்து நாட்களாக பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்பீக்கர் மூலம் பேசி அந்த சத்தத்திற்கு ஆடு மாடுகள் மிரளுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த மாநாட்டில் 2000க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ஆடு மாடு மாநாடு:

இயற்கை விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ஆடு மாடுகள் வளர்ப்பு, பனை தென்னை கள் எடுப்பது என பல்வேறு விஷயங்களை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகள் மேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடு மாடுகள் உணவுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் வனப்பகுதிகள் கட்டுப்பாட்டிள் இருக்கக்கூடிய மேய்ச்சல் நிலத்தில் ஆடு மாடுகள் மேய்க்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடானது நடைபெற இருக்கிறது.

மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை:


மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பின் கீழ் ஜூலை 10 2025 ஆம் தேதியான இன்று மாலை மதுரை விராதனூர் அருகே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. மதுரை மாநகரிலிருந்து பத்து முதல் 15 கிலோமீட்டர் தூரம் உள்ள விராதனூரில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கால்நடைகள் மத்தியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாடு ஆடு மாடுகள் உடன் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் அங்கு மேடை அமைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் இடம் பேசுவது போல் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 10 நாட்களாக பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Follow Us
Related Stories
மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!
சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!
துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்