Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயணிகளே அலர்ட்.. சென்னையில் மின்சார ரயில் சேவையில் பெரிய மாற்றம்.. வெளியான அறிவிப்பு!

Chennai EMU Train : சென்னையில் மின்சார ரயில் சேவைகளின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 ஜூன் 21ஆம் தேதியான நாளை முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளே அலர்ட்.. சென்னையில் மின்சார ரயில் சேவையில் பெரிய மாற்றம்.. வெளியான அறிவிப்பு!
மின்சார ரயில்கள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Jun 2025 17:43 PM

சென்னை, ஜூன் 20 : சென்னையில் மின்சார ரயில் சேவை  (Chennai EMu Trains) நேரத்தில் 2025 ஜூன் 21ஆம் தேதியான நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் (Egmore Railway Station) சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பயணிகள் வசதிக்காக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025 ஜூன் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் மின்சார ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில்கள். இந்த மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கனா பயணிகள் பயணித்து வருகின்றனர். புறநகர் பகுதிகளையும் இணைக்கக் கூடியது என்பதால் பயணிகள் அதிகம் பயணித்து வருகின்றனர். பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்குவதற்காக அவ்வப்போது மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மின்சார ரயில் சேவையில் நேரம் மாற்றம்

அதாவது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கொல்லம், மதுரை, மன்னார்குடி, திருச்செந்தூர், குருவாயூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

மேலும், 2025 ஜூன் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை வார நாட்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, மின்சார ரயில் சேவைகளின் நேரம் மாற்றி அமைத்து தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில் காலை 11 மணிக்கு பதிலாக அதிகாலை 3.15 மணிக்கும், சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் பகல் 12.15 மணிக்கு பதிலாக அதிகாலை 4.25 மணிக்கும் புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பு


செங்கல்பட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு 11.52 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 11.55 மணிக்கு புறப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு மதியம் 12.02 மணிக்கு மின்சார ரயில் புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கு புறப்படும். அரக்கோணத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 9.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் சிரமத்தை போக்க தாம்பரம் – சென்னை கடற்கரை பிரிவில் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.10 மணிக்கு சென்னை கடற்கரையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.