Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாஸ்போர்ட் அப்ளை பண்ணுறீங்களா? இனி கணவர் கையெழுத்து தேவையில்ல.. ஐகோர்ட் உத்தரவு

Madras High Court On Passport : பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் கையெழுத்து மனைவி பெற வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு, கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் அப்ளை பண்ணுறீங்களா? இனி கணவர் கையெழுத்து தேவையில்ல.. ஐகோர்ட் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம்Image Source: Getty
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Jun 2025 19:36 PM

சென்னை, ஜூன் 20 : பார்ஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள போது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியதாக உயர் நீதிமன்ற பெண் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வெளிநாடு பயணிக்கும் நபர்களுக்கு முக்கிய ஆவணமாக பாஸ்போர்ட் உள்ளது. இந்த பாஸ்போர்ட்டை பிரத்யேக இணையதளம் அல்லது பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.  இந்த பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பல முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.  அனைத்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே, பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பாஸ்போர்ட்  குறித்து சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாஸ்போர்ட் அப்ளை பண்ணுறீங்களா?

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அப்போது, கணவரின் கையெழுத்து இருந்தால் தான் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது பரிசீலனை செய்யும் முடியும் என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தாக தெரிகிறது.

ஆனால், தன் கணவருக்கும் தனக்கும் இடையே பிரச்னை இருப்பதால் தன்னால் கையெழுத்து வாங்க முடியவில்லை என்றும விவாகரத்து வழக்கும் நிலுவையில் இருப்பதாக அந்த பெண் கூறியிருக்கிறார். இருப்பினும், பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது பரீசலிக்கவில்லை என தெரிகிறது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கணவரின் கையொப்பத்தைப் பெறாமல் பாஸ்போர் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முக்கிய உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

இனி கணவர் கையெழுத்து தேவையில்லை

அதாவது, “திருமணமான பெண்ணை கணவருக்குச் சொந்தமான சொத்துக்களைப் போல நடத்துவதில் சமூகத்தின் மனநிலையைக் காட்டுகிறது. பாஸ்போர்ட்டுக்காக மனுதாரர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க, கணவரின் அனுமதியையும், குறிப்பிட்ட படிவத்தில் அவரது கையொப்பத்தையும் பாஸ்போர்ட் அலுவலகம் வலியுறுத்துவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே கணவன் மனைவி உடனான உறவில் பிரச்சனை உள்ள நிலையில், கணவரிடம் இருந்து கையெழுத்து பெற்று வருவது என்பது இயலாது. திருமணமாகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை. கணவனின், அனுமதி, கையெழுத்து இல்லாமல் மனைவி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க முடியும்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவரிடம் அனுமதி கேட்கும் நடைமுறை, பெண் விடுதலையை நோக்கி நகரும் ஒரு சமூகத்திற்கு நல்லதல்ல. இந்த நடைமுறை ஆண் மேலாதிக்கத்திற்குக் குறைவானது அல்ல. ஒரு பெண்ணை கணவனின் உடமையாக கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது” என்று கூறினார். மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தை அவரது கணவரின் கையொப்பம் இல்லாமல் பரிசீலிக்குமாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உத்தரவிட்டார்.