Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நித்யானந்தா எங்கே? கைலாசா எங்கே? சீடரிடம் அடுக்கடுக்கான கேள்வி கேட்ட நீதிமன்றம்

Nityananda : நித்யானந்தா குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பல கேள்விகளை கேட்டுள்ளது. நித்யானந்தா எங்கே உள்ளார்? கைலாசாவுக்கு எப்படி செல்வது? உள்ளிட்ட கேள்விகளை மதுரை கிளை நீதிபதிகள் கேட்டுள்ளனர். இதற்கு நித்யானந்தாவின் சீடர் பதில் கொடுத்து உள்ளார்.

நித்யானந்தா எங்கே? கைலாசா எங்கே? சீடரிடம் அடுக்கடுக்கான கேள்வி கேட்ட நீதிமன்றம்
நித்யானந்தாImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 Jun 2025 20:26 PM

சென்னை, ஜூன் 19 : நித்தியானந்தா  (Nityananda) எங்கே.. கைலாசா எங்கு உள்ளது. எப்படி செல்லனும் என சீடரிடம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை (Madras High Court Madurai Bench) அடுக்கடுக்கான் கேள்விகளை கேட்டுள்ளது. ஆஸ்திரேலியா அருகே யுஎஸ்கே என்ற தனி நாட்டில் நித்யானந்தா உள்ளதாக அவரது சீடர் பதில் கொடுத்தார். மதுரை ஆதின மடத்துக்கு நித்தியானந்தா நுழையக் கூடாது என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நித்யானந்தா என்ற ராஜசேகர் மேல்முறையீடு செய்தார்.  அந்த மனுவில் பக்தராக ஆதினம் மடத்திற்குள் நுழைய தடை விதிக்கக் கூடாது என்றும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

நித்யானந்தா எங்கே? கைலாசா எங்கே?

இந்த மனு 2025 ஜூன் 19ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை கிளை நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர். அதாவது, “நித்யானந்தா எங்கே உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது? அவரின் சீடரான நீங்கள் அங்கு சென்று வந்து உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா? என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

இதற்கு நித்யானந்தா தரப்பில் ஆஜரான அவரது சீடர் அரச்சா, நித்யானந்தா ஆஸ்திரேலியா அருகே யுஎஸ்கே என்ற தனி நாட்டில் உள்ளார். அந்த நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் உள்ளது. எங்கள் சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

யார் இந்த நித்யானந்தா?

பாலியல் வன்கொடுமை, கடத்தல் வழக்கில் சிக்கி தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளாகவே தலைமறைவாக உள்ளார். அவர் தனக்கு என்று தனி நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் தகவல்களை அவர் வெளியிட்டு இருந்தார். அதாவது, ஈக்வடார் அருகே உள்ள கைலாசா என்ற தீவில் இருப்பதாகவும், அந்நாட்டிற்கு என்று தனி கொடி, தனி நாணயங்கள், பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அதே நேரத்தில் அவ்வப்போது யூடியூபில் நித்யானந்தா பேசியும் வருகிறார். அண்மையில் கூட, அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.  ஆனால், அதற்கும் நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பதில் கொடுத்தார். தான் உயிருடன் தான் இருப்பதாக அவர் வீடியோவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.