பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை.. மீறினால் கடும் நடவடிக்கை.. எச்சரிக்கை விடுத்த சென்னை ஆணையர் அருண்..
Chennai: சென்னையை உலுக்கிய இந்த விபத்தை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அருண் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். அதாவது விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று ஜூன் 18 2025 அன்று 10 வயது சிறுமி மீது லாரி ஏரி சிறமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் 100 நாட்களுக்கு ஒப்படைக்க கூடாது எனவும் காலை 7:00 மணியிலிருந்து 12 மணி வரை மாலை 4 மணியிலிருந்து எட்டு மணி வரை அதாவது பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் அப்பகுதியில் செல்லக்கூடாது என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிகள் அமைந்துள்ள பகுதிக்கு கனரக வாகனங்களை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சிறுமி:
ஜூன் 18 2025 தேதியான நேற்று சென்னை பெரம்பூர் பகுதியில், கொளத்தூர் பொன்னியம்மன் பகுதியை சேர்ந்த யாமினி மற்றும் அவரது மகள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்னே சென்ற வாகனம் திடீரென நிறுத்த, அந்த வாகனத்தின் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக சடன் பிரேக் பிடித்துள்ளார் யாமினி.
அப்போது வாகனத்தில் இருந்து யாமினியின் மகள் சௌமியா சாலையில் தவறி விழுந்துள்ளார். இதனை கவனிக்காமல் பின்னால் வந்த லாரி சௌமியா மீது ஏறி உள்ளது. இதில் அந்த சிறுமியின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக பெரம்பூர் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் கார்த்திகேயனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல் ஆணையர் அருண் உத்தரவு:
சென்னையை உலுக்கிய இந்த விபத்தை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அருண் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். அதாவது விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்க கூடாது என தெரிவித்துள்ளார். அதேபோல் காலை ஏழு மணியிலிருந்து 12 மணி வரையும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில், கனரக வாகனங்களை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் உட்பட எந்த வாகனங்களையும் குறைந்தது 100 நாட்களுக்கு ஒப்படைக்க கூடாது எனவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது