Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘அப்பட்டமான பொய்’ அன்புணியின் பகிரங்க மன்னிப்பு.. ராமதாஸ் சொன்ன முக்கிய விஷயம்!

Anbumani vs Ramadoss : பாமகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு திமுக தான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் எனவும் கடைந்தெடுத்த பொய் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து பேசிய அவர், அதற்கான முடிவு போக போக தெரியும் என்று கூறினார்.

‘அப்பட்டமான பொய்’  அன்புணியின் பகிரங்க மன்னிப்பு.. ராமதாஸ் சொன்ன முக்கிய விஷயம்!
அன்புமணி - ராமதாஸ்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 Jun 2025 15:46 PM

சென்னை, ஜூன் 19 : பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு (PMK Internal Issues) திமுகவே காரணம் என அன்புமணி  (Anbumani) கூறுவது அப்பட்டமான பொய் எனவும், திமுக இதில் தலையிடுகிறது என்பது கடைந்தெடுத்த பொய் எனவும் பாமக நிறுவனம் ராமதாஸ் (Ramadoss) கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பாமகவில் இளைஞரணி அணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமித்தது, 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக என பல்வேறு விஷயங்களில் தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தான் தான் பாமகவின் தலைவர், நிறுவனர் என ராமதாஸ் அதிரடியாக கூறினார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்சை விஸ்வரூபம் எடுத்தது.   தன் மூச்சு உள்ளவரை பாமக தலைவராக தொடர்வேன் என ராமதாஸ் கூறி வருகிறார். இப்படியே இருவருக்கு பிரச்னை நீடித்து வருகிறது.

பாமகவில் உட்கட்சி பிரச்னை

இவர்களுக்கு இடையேயான பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர கட்சி மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  சமீபத்தில் கூட விழுப்பரம் தைலாபுரத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்து பேசினார். அப்போதும் கூட பிரச்னை முடிவுக்கு வரவில்லை.

இந்த சூழலில், கடந்த வாரம் மேடையிலேயே அன்புமணி தனது தந்தை ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், தந்தை ராமதாஸ் என்ன சொல்கிறாரோ, அவர் சொல்லிப்படி ஒரு மகனாகவும், கட்சி தலைவராகவும் செய்வதாக அன்புமணி கூறினார்.

அன்புமணிக்கு மன்னிப்புக்கு ராமதாஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து ராமதாஸ் பதிலளித்தார்.

”அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்”

பாமக எல்எல்ஏ அருள், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “பாமக நிர்வாகிகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதி.

அன்புமணி ஆலோசனை நடத்தும் போது அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கலாம். தொடர்ந்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகிறேன்” என கூறியுள்ளார். அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து எழுப்ப கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், அதற்கான முடிவு போக போக தெரியும் என பாடலைப் பாடினார்.

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சை திமுக தான் காரணம் என அன்புமணி கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், ”பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையேயான பிரச்சினையில் திமுக தலையீடு என்பது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய்”  என்று கூறினார். தொடர்ந்து, “செய்தியாளர்கள் என்னை துரத்த வேண்டாம்.. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.. என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று ராமதாஸ் தெரிவித்தார்.