Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் பயணிகளே! இன்று முதல் விரைவு ரயில்களில் வரும் புதிய மாற்றம்.. முக்கிய அறிவிப்பு

Southern Railway Adds Coaches:தென்னக ரயில்வே, ஜூன் 20, 2025 முதல் சிலம்பு, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் அலப்புழா விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 2025 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தற்காலிகமாக இருக்கும்.

ரயில் பயணிகளே!  இன்று முதல் விரைவு ரயில்களில் வரும் புதிய மாற்றம்.. முக்கிய அறிவிப்பு
ரயில் பயணிகளே விரைவு ரயில்களில் வரும் புதிய மாற்றம்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 20 Jun 2025 07:18 AM

தமிழ்நாடு ஜூன் 20: தென்னக ரயில்வே (2025 ஜூன் 20) (Southern Railway) முதல் சில முக்கிய விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை (Number of passengers) அதிகரிப்பை காரணமாகக் கொண்டு, சிலம்பு, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் அலப்புழா ரயில்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 1 AC 2nd Tier, 2 AC 3rd Tier, 3 ஸ்லீப்பர் மற்றும் 1 பொதுப் பெட்டி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் 2025 ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை (June to August) செயல்படும். பயணிகளுக்கு அதிக வசதி மற்றும் வசதியான பயண அனுபவம் வழங்குவதே இதன் நோக்கமாகும். தேவைக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவு மற்றும் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தென்னக ரயில்வேயின் அறிவிப்பின்படி, இன்று (ஜூன் 20) முதல் தென்னக மாநிலங்களை இணைக்கும் முக்கிய விரைவு மற்றும் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலம், விடுமுறை மற்றும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சிலம்பு, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் அலப்புழா ரயில்களில் இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

எந்தெந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சிலம்பு எக்ஸ்பிரஸ் (20681/20682) ரயிலில் 2025 ஜூன் 20 முதல் 2025ஆகஸ்ட் 27 வரை (தாம்பரத்திலிருந்து) மற்றும் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 28 வரை (சேங்கோட்டையிலிருந்து) 1 AC 2nd Tier, 2 AC 3rd Tier, 3 ஸ்லீப்பர் மற்றும் 1 பொதுப் பெட்டி என 7 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

நாகர்கோவில் சூப்பர்ஃபாஸ்ட் (22657/22658) ரயிலில் 2025 ஜூன் 18 முதல் 2025 ஆகஸ்ட் 28 வரை தாம்பரத்திலிருந்து மற்றும் நாகர்கோவில் வரை மேற்கூறிய அளவிலான கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும்.

சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் ரயிலில் (12695/12696) 2025 ஜூன் 27 முதல் 2025 ஆகஸ்ட் 28 வரை 1 AC 2nd Tier பெட்டி இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் – அலப்புழா ரயிலில் (22639/22640) 2025 ஜூன் 25 முதல் 2025 ஆகஸ்ட் 26 வரை கூடுதல் 1 AC 2nd Tier பெட்டி சேர்க்கப்படும்.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தெற்கு ரயில்வே அறிவிப்பு – பயணிகள் மகிழ்ச்சி

இந்த மாற்றங்களின் மூலம் பயணிகளுக்கு அதிக வசதியும், இரயில் பயண அனுபவமும் வழங்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. தற்காலிகமாக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடுகள், தேவைக்கு ஏற்ப நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் இந்த மாற்றங்கள், விரைவில் நிரந்தரமாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே (Southern Railway) என்பது இந்திய இரயில்வேயின் முக்கியமான 18 மண்டலங்களில் ஒன்றாகும். இது 1951ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் இரயில்வே மண்டலமாக உருவாக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே மண்டலம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகள் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இது சென்னை (எக்ஸ்பிரஸ் மற்றும் மேல் நிர்வாகத் தலைமையகம்) வழியாக செயல்படுகிறது.