Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்.. பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு..

Dayanidhi Maran VS Kalanithi Maran: திமுக எம்.பியும், கலாநிதி மாறனின் சகோதரருமான தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி உள்ளிட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பண மோசடியில் ஈடுபட்டதாகவும் முறைகேடாக பங்குகளை பெற்றதாகவும் கூறி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்.. பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு..
கலாநிதி மாறன் - தயாநிதி மாறன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 20 Jun 2025 12:00 PM

சன் டிவி நிறுவன பங்குகள் தொடர்பாக கலாநிதி மாறன் (Kalanithi Maran) மற்றும் அவரது மனைவி  காவிரி கலாநிதிக்கு உட்பட 7 பேருக்கு திமுக எம்.பியும், கலாநிதி மாறனின் சகோதரருமான தயாநிதி மாறன் (Dayanidhi Maran) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சன் குழுமத்தின் பங்கு நடைமுறை 2003 ஆம் ஆண்டின் ஆவணத்தின் படி மீண்டும் மாற்ற வேண்டும் எனக் கூறி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மணிகண்ட்ரோல் இணையதள செய்தி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி மாறன் உட்பட 7 பேரும் பண மோசடி நடைமுறைகளில் ஈடுபட்டதாக அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் லா தர்மாவின் கே சுரேஷ் என்பவர் மூலமாக இந்த சட்ட அறிவிப்பை அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாநிதி மாறனுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் கூறுவது என்ன?

Dayanidhi Kalanithui 1

குடும்ப சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தை கலாநிதிமாறன் உடல் நல குறைவால் இருந்தபோது 2003 உரிய சட்ட ஆவணங்கள் இன்றி தாய் மல்லிகா மாறன் பெயருக்கு சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் கிடைப்பதற்கு முன்னே சொத்துக்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தாயார் மல்லிகா மாறனின் பெயரிலிருந்து தனது பெயருக்கு நிறுவன பங்குகள் மாற்றப்பட்டதாகவும் சன் டிவி குழுமத்தின் 60% பங்குகள் பிற பங்குதாரர்களின் ஆலோசனை இன்றி மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் வரை கலாநிதி மாறனிடம் எந்த பங்குகளும் சொந்தமாக வைத்திருக்கவில்லை என்றும் இந்த நடவடிக்கைக்கு பிறகு பெரும்பான்மை கொண்ட உரிமையாளராக மாறினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மோசடியில் ஈடுபட்ட கலாநிதி மாறன்:

பட்டியலிடப்பட்ட சன் டிவி நெட்வொர்க்கில் கலாநிதி மாறன் தற்போது 75 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். மேலும் இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவராகவும், 2.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உள்ளார் என அந்த நோட்டீஸில் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் நிறுவன மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ், பணமோசடி உட்பட கடுமையான குற்றங்களாகக் கருதப்படுவதால், தயாநிதி மாறன் அரசாங்க விசாரணையை தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த குற்றச்செயல்களில் கிடைத்த தொகை வாயிலாக, சன் டைரக்ட், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சவுத் ஏசியன் எப்.எம்., சன் பிக்சர்ஸ், தென்ஆப்ரிக்கா, பிரிட்டனில் கிரிக்கெட் அணிகள், ஸ்பைஸ்ஜெட் முதலீடு என ஏராளமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன எனவும், மேலும், 2006 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸில் சன் டிவி அதன் பங்குதாரர்களை தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட பலன்களை காவிரி கலாநிதி மாறன் காவிரி கலாநிதி ஆகியோர் முரசொலி மாறனின் வாரிசுகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இவற்றை செய்ய தவறினால் செவ்வகிரமணல் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது