Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வேளச்சேரி காவல் நிலையத்தில் பரபரப்பு.. 3வது மாடியில் இருந்து குதித்த நபர்.. நடந்தது என்ன?

Chennai Crime News : சென்னையில் வேளச்சேரி காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காவல் நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேளச்சேரி காவல் நிலையத்தில் பரபரப்பு.. 3வது மாடியில் இருந்து குதித்த நபர்.. நடந்தது என்ன?
வேளச்சேரி காவல் நிலையம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Jun 2025 15:25 PM

சென்னை, ஜூன் 20 : சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் (Velachery Police Station) விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்த செல்லப்பட்ட நபர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் வேளச்சேரி எப்போது பரபரப்பாகவே இருக்கும். வேளச்சேரியில் ஏகப்பட்ட ஐடி கம்பெனிகள், ரயில் நிலையம் உள்ளிட்டவை இருக்கிறது. இதனால், எப்போது அப்பகுதி பரபரப்பாகவே இருக்கும். இப்படியான சூழலில், வேளச்சேரி காவல் நிலையத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, வேளச்சேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

3வது மாடியில் இருந்து குதித்த நபர்

அதாவது, ராஜா என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 2025 ஜூன் 20ஆம் தேதியான இன்று காலை 6.30 மணியளவில் திருட்டு முயற்சி வழக்கில் சந்தேகத்தின் பேரில் வேளச்சேரி போலீசார் ராஜா என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது, எச்சில் துப்ப போவதாக கூறி காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த போலீசார், உடனே அவரை  மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப்டடு வருகிறது. தற்போது அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விசாரணைக்கு அழைத்த சென்ற நபர்  காவல்நிலையத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவம்

முன்னதாக, சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து கர்ப்பிணி குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் குழந்தை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த பெண்ணின் கணவர் உடனே அருகில் இருக்கும் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கணவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)