Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இல்லாமல் போய்விடும் – பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காட்டம்..

Annamalai: தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இருக்காது என குறிப்பிட்டுள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இல்லாமல் போய்விடும் – பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காட்டம்..
அண்ணாமலை
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 10 May 2025 11:53 AM

முன்னாள் ராணுவ வீரர்களை அழைத்து பேரணி செல்கிறேன் என தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது, இந்தியாவில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது என தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையெ நடைபெற்று வரும் மோதலை தொடர்ந்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் ” 2008 மும்பை அட்டாக் நடந்த போது 166 பேர் கொல்லப்பட்டார்கள். அன்று அமைதி முறையில் ஐநா சபையில் இருந்து எல்லோரும் வேண்டுகோள் விடுத்தும் குறிப்பாக யாரெல்லாம் இந்த தாக்குதலுக்கு முன்னிலையில் இருக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு தொடர்ச்சியாக பல தாக்குதல் நடந்தாலும். இந்த பாகிஸ்தான் நாட்டில் இருக்கக்கூடிய பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவில் வந்து பாருங்கள் டிஎன்ஏ ஆதாரம், தொலைபேசி உரையாடல் ஆகியவை பாருங்கள் தீவிரவாதிகள் எப்படி வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதை பாருங்கள். அன்று பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவின் விமான தளத்திற்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் திரும்பிப் போன பாகிஸ்தான் அதிகாரிகள் உள்ளே வந்து இங்கு விசாரணை செய்யலாம். அதே போல் எங்களையும் உங்கள் நாட்டுக்கு அனுமதியுங்கள் என கேட்டார்கள் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பாகிஸ்தான் செய்யக்கூடிய எல்லா தவறுகளுக்கும் நம்முடைய பதிலடி. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படி மேலே சென்று கொடுக்கிறோம். 2025 ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அதற்கும் பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் தீவிரவாதி மையங்கள் எங்கே இருக்கிறதோ லஸ்கர் தொய்பா, இஸ்புல் முஜாஹிதீன் போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி இருக்கிறோம். பாகிஸ்தானின் பகுதியில் 9 இடத்தில் தீவிரவாத அமைப்புகளை பார்த்து தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை பார்த்து தாக்குகிறார்கள். இன்று அதிகாலையில் அதிகாரி ஒருவரை கொன்று இருக்கிறார்கள். அதை தாண்டி கடந்த 13 நாளாக எல்கை தாண்டி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக 400 கும் மேற்பட்ட டுரோன்களை நமது நாட்டிற்குள் அனுப்பி அட்டாக் செய்திருக்கிறார்கள். இந்தியா எடுத்த நடவடிக்கை என்னவென்றால் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் செய்த தவறுக்கு தீவிரவாத மையங்கள் எங்கு இருக்கிறதோ அதை நோக்கி நாம் தாக்குகிறோம். பாகிஸ்தான் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களை தாக்குகிறார்கள். நமது மீது ஒருவர் போர் தொடுக்கும்போது பதிலடி கொடுக்கவில்லை என்றால் நாம் கோழைகள் நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பேச வேண்டிய கட்டாயம் நம் இந்தியாவிற்கு இருக்கிறது.

பாகிஸ்தான் செய்திருக்கிற தவறுகளுக்கெல்லாம் பதிலடி கொடுத்து வருகிறோம். இந்தியாவின் பொருளாதாரத்தில் 12-ல் ஒரு பங்கை மட்டுமே கொண்டுள்ள பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. நாம் எந்த நாட்டின் எல்லையும் பிடிப்பதற்கு சண்டை போடவில்லை. நமது நாட்டின் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலை வேரோடு சாய்க்க வேண்டும் என்பதற்காக இந்த போராடி வருகிறோம்.

இந்த நேரத்தில் நாம் ஒரே நாடாக ஒற்றுமையாக இருந்து இந்தியர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் மக்கள் என்ற உணர்வோடு இருக்க வேண்டும். சீருடை போட்டுள்ள அனைவரின் பேச்சையும் கேட்க வேண்டும். தற்போது போர் ஒத்திகை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய கடமை அரசு சொல்லக் கூடியதை நாம் கேட்க வேண்டும். செயல்படுத்த வேண்டும். பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காவல்துறையினர் சொல்லக்கூடியதை கேட்க வேண்டும்.

சமூக வலைதளத்தில் எல்லோருக்கும் பாதுகாப்பான பதிவுகளை பதிவிட வேண்டும். நிச்சயமாக இன்றும் நாளையும் நமக்கு முடியப்போவதில்லை மோடி அவர்களை பொறுத்தவரையில் பாரத பிரதமர் சங்கல்பத்தோடு களம் இறக்க இருக்கிறார். தாக்குதல் நடந்த போது பிரதமர் அவர்கள் மிகத் தெளிவாக இந்த பூமியில் எங்கு ஒளிந்து இருந்தாலும் பூமிக்கு கீழே ஒளிந்து இருந்தாலும் உங்களை பிடித்து இல்லாமல் பண்ணி விடுவேன் என கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இருக்காது:


இந்த போர் தீவிரவாதத்திற்கு எதிரான போர். இன்று நாளை முடியாது நாம் அக்ரசிவாகப் போகத்தான் போகிறோம். பாகிஸ்தான் இதன் பிறகு இன்னொரு அப்பாவி மக்கள் உயிரை எடுப்பதற்கு பல முறை யோசிக்க வேண்டும். நாம் எல்லோருமே இந்த நேரத்தில் பேசக்கூடிய விஷயம் செய்யக்கூடிய விஷயம் எல்லாம் கண்ணியமிக்கதாக அரசு ஒத்துழைப்பு அளிப்பதாக இருக்க வேண்டும் என்ற தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

மக்களை தாக்கக்கூடிய பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது நாம் நினைத்தால் பாகிஸ்தானை ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம். ஆனால் மோடி அவர்கள் அறத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார். அவர்கள் டுரோன் மூலம் தாக்குதல் நடத்துவதால் நாம் அவர்களது ஏர் டிஃபென்ஸை நாம் திரும்ப தாக்கியுள்ளோம்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சராக இருந்தாலும் சரி மாற்றுக் கட்சியாக இருந்தாலும் சரி எத்தனையோ மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் பாகிஸ்தானை எதிர்க்கக்கூடிய விஷயத்தில், எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் ஒரு பேரணி எடுக்கிறேன் முன்னாள் ராணுவ வீரர்களை அழைத்துச் செல்கிறேன் என்றால் அதனை வரவேற்கக் கூடியது தான்… இந்திய அரசுக்கு முழுமையாக எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து” எனபேசியுள்ளார்.

பான் இந்தியா ஸ்டார்.. சினிமாவில் 23 ஆண்டுகளைக் கடந்த தனுஷ்!
பான் இந்தியா ஸ்டார்.. சினிமாவில் 23 ஆண்டுகளைக் கடந்த தனுஷ்!...
விஜய் படத்துடன் களமிறங்கும் கார்த்தி படம்.. பின்னணி இதுதான்!
விஜய் படத்துடன் களமிறங்கும் கார்த்தி படம்.. பின்னணி இதுதான்!...
இனி முன்னேற்றம் தான்.. மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
இனி முன்னேற்றம் தான்.. மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்கா.. என்ன மேட்டர்?
ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்கா.. என்ன மேட்டர்?...
மணல் விளையாட்டு: குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் அற்புதக் கலை!
மணல் விளையாட்டு: குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் அற்புதக் கலை!...
பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இருக்காது - அண்ணாமலை காட்டம்..
பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இருக்காது - அண்ணாமலை காட்டம்.....
பாகிஸ்தான் தாக்குதல்... ராணுவ அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்!
பாகிஸ்தான் தாக்குதல்... ராணுவ அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்!...
கோடை காலத்தில் சிறுநீரக கல் உருவாகும் அபாயம் அதிகரிக்குமா?
கோடை காலத்தில் சிறுநீரக கல் உருவாகும் அபாயம் அதிகரிக்குமா?...
ஆபரேஷன் சிந்தூர் பெயரில் உருவாகும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ஆபரேஷன் சிந்தூர் பெயரில் உருவாகும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!...
சனிப்பிரதோஷத்தில் இப்படி வழிபட்டால் பலன்கள் ஏராளம்!
சனிப்பிரதோஷத்தில் இப்படி வழிபட்டால் பலன்கள் ஏராளம்!...
இந்தியாவுக்கு ஆதரவு... பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா
இந்தியாவுக்கு ஆதரவு... பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா...