எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. இரண்டு கட்டங்களாக நடத்த திட்டம்..
Edappadi Palanisamy: வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

எடப்பாடி பழனிசாமி
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில மாத காலங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) தரப்பில் 2025 ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய இரண்டு தேதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (Edapadi Palanisamy) தலைமையில் சென்னையில் இருக்கக்கூடிய கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் கட்சிப் பணிகள், தொண்டர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி ஏஜெண்டுகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் வருகின்ற ஜூன் 24 2025 மற்றும் ஜூன் 25 2025 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டம்:
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், ‘புரட்சித் தமிழர்’ திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 24.6.2025, 25.6.2025 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப்… pic.twitter.com/pal4rZ8Jqn
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) June 19, 2025
இந்த ஆலோசனைக் கூட்டம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 9.30 மணிக்கு ஒரு கட்டமாகவும், பிற்பகல் 3:30 மணிக்கு இரண்டாம் கட்டமாகவும் நடத்தப்பட உள்ளது. ஜூன் 24 2025 அன்று காலை 9.30 மணிக்கு சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, விழுப்புரம், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை மத்தியம், ராணிப்பேட்டை கழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, ஆகிய மாவட்டங்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது
ஜூன் 24 2025 பிற்பகல் 3:30 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், ராமநாதபுரம், விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, தேனி கிழக்கு, தேனி மேற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய பகுதி மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம்:
முதல் நாளை தொடர்ந்து இரண்டாம் நாள் அதாவது ஜூன் 25 2025 காலை 9:30 மணிக்கு திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மேற்கு, தஞ்சாவூர் மத்தியம், தஞ்சாவூர் தெற்கு, கள்ளக்குறிச்சி, சேலம் மாநகர், சேலம் புறநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு, நீலகிரி, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு உள்ளிட்ட பகுதிகளுக்கான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது
அன்று மதியம் பிற்பகல் 3:30 மணிக்கு திருப்பத்தூர், வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம், சென்னை புறநகர், வடசென்னை வடக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது குறிப்பாக தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நிலையில் அதற்கான பணிகள் மேற்கொள்வது பூத் கமிட்டி ஏஜென்ட்களை அமைப்பது கள நிலவரம் எவ்வாறு உள்ளது, மக்களுக்கான தேவை என்ன மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.