டெல்லியைப் போல தமிழகத்திலும் 2026ல் பாஜக ஆட்சி – மதுரையில் அமித்ஷா உறுதி
Amit Shah Predicts Victory : இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது பேசிய அவர், 2025-இல் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடந்தது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அதேபோல், 2026-இல் தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும் என்றார்.

மதுரை, ஜூன் 8, 2025: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில், ஜூன் 8, 2025 அன்று மதுரையில் பல முக்கிய அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றார். குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், பாஜக (BJP) நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார். கடந்த ஜூன் 7, 2025 அன்று விமானம் மூலம் மதுரை (Madurai) வந்த அமித்ஷா, நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 8, 2025 அன்று காலை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவர் வருகையையொட்டி கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர், மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷா, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி இயக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில் முக்கிய பேசியிருந்தார்.
‘பாடத்திட்டத்தை தமிழில் தர மறுப்பது ஏன்?’
கடந்த 2024 மக்களவை தேர்தலில் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றதாக குறிப்பிட்ட அவர், ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றியை நினைவூட்டினார். அப்போது பேசிய அவர், “2025-இல் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடந்தது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அதேபோல், 2026-இல் தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும் என்றார். மேலும் “ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகம் மிகப்பெரிய ஆதரவை தெரிவித்தது. பஹல்காமில் பயங்கரவாதிகளை அழிக்க மோடி அரசின் உறுதியான தீர்மானம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. மக்கள் திமுகவை தோற்கடிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்றார்.




மேலும், பாடத்திட்டத்தை தமிழில் தர மறுப்பது ஏன்? தமிழ்நாட்டில் தமிழ், தமிழ் எனப்பேசும் நீங்கள், பாடத் திட்டத்தை தமிழில் தர மறுப்பது ஏன்?; தமிழ்நாட்டில் உயர்கல்வி பாடத்திட்டம் உடனடியாக தமிழில் இயற்றப்பட வேண்டும் தமிழக மரபு சின்னமான செங்கோலை, உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்ற மோடிக்கு நன்றி என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் திமுக ஊழல், ஊழல் என்று ஊழலில் திளைக்கிறது; மத்திய அரசு நிதியை, மக்கள் நலனுக்கு செலவிடாமல், நன்மை கிடைக்காமல் செய்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் விலைவாசி உயர்வாலும், வாழ்வாதார அச்சத்தாலும் உள்ளனர். மாநிலத்தில் உள்ள பிரச்னை பற்றி முதல்வருக்கு அக்கறை இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களால் தமிழ்நாடு மலிந்து காணப்படுகிறது; தமிழ்நாட்டு முதல்வருக்கு இதைப் பற்றி எந்த அக்கறையோ, கவலையோ கிடையாது என்றார்.
2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி – அமித்ஷா
#WATCH | Madurai, Tamil Nadu | Union Home Minister Amit Shah says, “In 2025, we formed the government in Delhi, in 2026, the BJP-NDA will form the government in West Bengal and Tamil Nadu…” pic.twitter.com/P1WQUd7Mh3
— ANI (@ANI) June 8, 2025
அமித்ஷாவின் வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
அமித்ஷாவின் வருகையையொட்டி மதுரை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முக்கிய சாலை பகுதிகளில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 2026 தேர்தலை முன்னிட்டு அமித்ஷாவின் தமிழகம் பயணம், பாஜகவின் திட்டமிட்ட அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. அரசியல் அரங்கில் பாஜக கூட்டணிக்கு மிகப்பெரும் நம்பிக்கையை அவரது பேச்சு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.