IPL 2026: மனு பாகரிடம் சூர்யவன்ஷி குறித்த கேள்வி.. சோசியல் மீடியாவில் கிளம்பும் விவாதம்!

Manu Bhaker - Vaibhav Suryavanshi: இந்திய துப்பாக்கிச் சுடுதல் லீக், அடித்தளத் திட்டங்கள் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடைய விளையாட்டு வீரர் செயலியின் வெளியீடு போன்ற தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்வின் போது, ​​இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்த தனது கருத்தை பத்திரிகையாளர்கள் மனு பாகரிடம் கேட்டனர்.

IPL 2026: மனு பாகரிடம் சூர்யவன்ஷி குறித்த கேள்வி.. சோசியல் மீடியாவில் கிளம்பும் விவாதம்!

மனு பாகர் - வைபவ் சூர்யவன்ஷி

Published: 

28 Apr 2026 16:26 PM

 IST

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர் மனு பாகர், சமீபத்தில் நடைபெற்ற இந்திய தேசிய துப்பாக்கிச் சுடும் சங்கத்தின் (NRAI) 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வின்போது, ​​பாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மனு பாகரிடம் (Manu Bhaker) ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டன. ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வில் கிரிக்கெட் வீரர் பற்றிய கேள்வியை எழுப்பியது, மனு பாகரின் சாதனைகளுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான அநீதி என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ: மழை எச்சரிக்கை.. தடை பயத்தில் ராஜஸ்தான்.. தகர்க்குமா பஞ்சாப்?

வைபவ் சூர்யவன்ஷி பற்றி மனு பேக்கர் என்ன சொன்னார்?


இந்திய துப்பாக்கிச் சுடுதல் லீக், அடித்தளத் திட்டங்கள் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடைய விளையாட்டு வீரர் செயலியின் வெளியீடு போன்ற தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்வின் போது, ​​இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்த தனது கருத்தை பத்திரிகையாளர்கள் மனு பாகரிடம் கேட்டனர். இந்தக் கேள்விக்கு பதிலளித்த மனு பாகர், “வைபவ் சூர்யவன்ஷிக்கு சரியான வழிகாட்டுதல், அவரைச் சுற்றி ஒரு நேர்மறையான சூழல் மற்றும் சரியான நபர்கள் வழிகாட்டினால், வயது ஒரு பொருட்டல்ல. அவர் இந்திய விளையாட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

மனு பாகரிடம் இதுபோன்ற கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டதற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சுடும் போட்டியின் போது, ​​ஒலிம்பிக் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரரிடம் ஒரு கிரிக்கெட் வீரரைப் பற்றிக் கேட்பது முறையற்றது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பரவலாக இருப்பதால், மற்ற விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள். இதுமட்டுமின்றி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் முன்னாள் இயக்குநர் ஜெய் பட்டாச்சார்யாவும் இந்தச் சம்பவத்திற்குக் கடுமையாகப் பதிலடி கொடுத்தார்.

ஜெய் பட்டாச்சார்யா விமர்சனம்:

இதுதொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் முன்னாள் இயக்குநர் ஜெய் பட்டாச்சார்யா தனது எக்ஸ் பக்கத்தில் என்ற சமூக வலைதளத்தில், ”நண்பர்களே, மனு பாகர் ஒரு ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர். வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்பது, அவரது சாதனைகளுக்கும் விளையாட்டுக்கும் அநியாயமானது. எப்படியும் கிரிக்கெட்தான் இந்த நாட்டின் மிகப்பெரிய பேரார்வம். சூர்யவன்ஷியைப் பற்றி ஒரு தலைப்புச் செய்தி வெளியிட, உங்கள் விளையாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு வேறு எந்த பிரபலத்தின் கருத்தும் தேவையில்லை. மாற்றாக, அடுத்த முறை, வைபவ் சூர்யவன்ஷியிடம் மனு பாக்கரைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள், பெருமை படுத்துங்கள்” என்று தெரிவித்தார்.

ALSO READ: தடுமாறும் சிஎஸ்கே.. கடினமாகும் பயணம்.. பிளே ஆஃப் செல்ல இதுதான் ஒரே வழி!

ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை என்ற பெருமையை மனு பாகர் பெற்றுள்ளார். 2024 ஒலிம்பிக் துப்பாக்கி சூடு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் கலப்பு அணிப் போட்டிகளில் மனு பாகர் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?