Team India: பதவிக்காலத்தை நீட்டிக்க விருப்பம்.. கவுதம் கம்பீரின் அடுத்த இலக்கு இதுதான்!

Indian Head Coach Gautam Gambhir: கவுதம் கம்பீருக்கு 2028 டி20 உலகக் கோப்பை வரை தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க எதிர்பார்ப்பதைப் போலவே, கேப்டன் என்ற முறையில் சூர்யகுமார் யாதவ்தான் காம்பீரின் முதல் முன்னுரிமையாக இருக்கிறார். சூர்யகுமார் யாதவின் தலைமையில் இந்தியா 2025 டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், அவரது ஃபார்ம் பிசிசிஐ நிர்வாகத்திற்கு ஒரு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது.

Team India: பதவிக்காலத்தை நீட்டிக்க விருப்பம்.. கவுதம் கம்பீரின் அடுத்த இலக்கு இதுதான்!

கவுதம் கம்பீர் - சூர்யகுமார் யாதவ்

Published: 

16 Apr 2026 18:47 PM

 IST

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா 2026 டி20 உலகக் கோப்பையை வென்றது. கவுதம் கம்பீருக்கு அடுத்த பெரிய சவால் 2027 ஒருநாள் உலகக் கோப்பை ஆகும். பிசிசிஐ (BCCI) ஒப்பந்தத்தின்படி, வருகின்ற 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை கவுதம் கம்பீர் இந்தியாவின் (Indian Cricket Team) தலைமைப் பயிற்சியாளராக இருப்பார். இருப்பினும், சில அறிக்கைகளின்படி, கவுதம் கம்பீர் 2028 டி20 உலகக் கோப்பை வரை தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்புவதாகத் தெரிகிறது. மேலும், இந்திய டி20 அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ்தான் இருக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: இந்திய அணிக்கு அழைப்பு..? 15 வயதில் அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி!

பிசிசிஐ நம்பிக்கை:

இந்திய அணி கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, கவுதம் கம்பீருக்கு இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்திய அணிக்கு 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஆசிய கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கவுதம் கம்பீருக்கு, 2028 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று பட்டத்தை வெல்வது என 2 சவால்கள் உள்ளன. இருப்பினும், சில அறிக்கைகளின்படி, கவுதம் கம்பீருக்கு 2028 டி20 உலகக் கோப்பை வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​பிசிசிஐ என்ன முடிவை எடுக்கிறது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது.

சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவே தொடர விருப்பம்:

கவுதம் கம்பீருக்கு 2028 டி20 உலகக் கோப்பை வரை தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க எதிர்பார்ப்பதைப் போலவே, கேப்டன் என்ற முறையில் சூர்யகுமார் யாதவ்தான் காம்பீரின் முதல் முன்னுரிமையாக இருக்கிறார். சூர்யகுமார் யாதவின் தலைமையில் இந்தியா 2025 டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், அவரது ஃபார்ம் பிசிசிஐ நிர்வாகத்திற்கு ஒரு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது.

சூர்யகுமார் யாதவ் எப்போது மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்புவார்?

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது. ஆனால் அவரது ஃபார்ம் அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ-க்கும் பெரும் தலைவலியாக மாறி வருகிறது. தற்போது 35 வயதாகும் சூர்யகுமார் யாதவ், டி20 உலகக் கோப்பையில் 242 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவிற்கு எதிராக 81 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார். தற்போது, ​​ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் சூர்யகுமார் யாதவ், 4 போட்டிகளில் 106 ரன்கள் எடுத்துள்ளார். இதில், டெல்லி அணிக்கு எதிராக மட்டுமே சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்திருந்தார்.

ALSO READ: ஐசிசி செய்த சிறப்பு கௌரவம்.. சிறந்த வீரர் விருதை வென்ற சஞ்சு சாம்சன்!

ஐபிஎல் 2026 சீசனுக்கு பிறகு, இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு டி20 தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்த சுற்றுப்பயணத்தின் போது சூர்யகுமார் யாதவ் எப்படி செயல்படுவார் என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டால், ஒலிம்பிக் மற்றும் 2028 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கக்கூடும். பிசிசிஐ வட்டாரங்களின்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார், ஆனால் அதற்குப் பிறகான முடிவு அவரது செயல்திறனைப் பொறுத்தே அமையும்.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி