India – England 4th Test: 5 இடது கை பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. டெஸ்ட் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த இந்திய அணி!

Left-handed Batsmen: மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்டில், இந்திய அணி வரலாறு காணாத சாதனை படைத்தது. ஒரே இன்னிங்ஸில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் (யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்) அரைசதம் அடித்தனர்.

India - England 4th Test: 5 இடது கை பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. டெஸ்ட் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த இந்திய அணி!

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

27 Jul 2025 21:56 PM

 IST

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்டில் (India – England Test Series) இந்திய கிரிக்கெட் அணி வித்தியாசமான சாதனை ஒன்றை படைத்தது. மேலும், இது இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்துள்ளது. இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு 311 ரன்கள் பின்தங்கிய பிறகு, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி (Indian Cricket Team) அற்புதமான செயல்திறனைக் காட்டியது. இந்த நேரத்தில் இந்திய அணியின் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் முக்கியமான ரன்கள் எடுத்து ஒரு தனித்துவமான சாதனையை படைத்தனர். இந்த 5 சிறப்பு வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட் (Rishabh Pant), ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.

5 இடது கை பேட்ஸ்மேன்கள் புதிய வரலாறு:

டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணி தனது பிளேயிங் லெவனில் 5 இடது கை பேட்ஸ்மேன்களுடன் விளையாடியது. இந்த வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் , சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆவர். இந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் மான்செஸ்டர் டெஸ்டில் 50+ ரன்கள் எடுத்து புதிய வரலாறு படைத்தனர். முதல் முறையாக , இந்தியாவின் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் ஒரே டெஸ்டில் 50 ரன்களை எட்டினர் . இதுபோன்ற ஒரு தருணத்தை இந்திய கிரிக்கெட்டில் இதற்கு முன்பு செய்தது கிடையாது.

ALSO READ: 35 ஆண்டுகால சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி.. சதம் அடித்து சாதனை படைத்த சுப்மன் கில்!

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது பேட்டிங் பலத்தை அற்புதமாக வெளிப்படுத்தியது . யஷஸ்வி ஜெய்ஸ்வால் , சாய் சுதர்சன், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் பேட்டிங்கால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல், தங்கள் அரைசத இன்னிங்ஸால் இந்தியாவை வலுவான நிலையில் வைத்தனர்.

ALSO READ: எலும்பு முறிவுடன் எகிறி அடித்த ரிஷப் பண்ட்.. குவிந்த எக்கச்சக்க சாதனைகள்..!

மான்செஸ்டரில் விளையாடிய முக்கியமான இன்னிங்ஸ்கள்:


இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்கள் எடுத்தார். காயமடைந்த போதிலும் ரிஷப் பண்ட் களமிறங்கி 54 ரன்கள் எடுத்தார். அதே இன்னிங்ஸில் சாய் சுதர்ஷனும் 61 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அற்புதமாக பேட்டிங் செய்து அரைசதம் எடுத்து விளையாடி வருகின்றனர். மான்செஸ்டரில் கடைசி நாளில் பேட்டிங் செய்ய வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 70 ரன்களைக் கடந்துள்ளனர். இரு வீரர்களுக்கும் இடையே 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி, இங்கிலாந்து அணியை விட முன்னிலையில் உள்ளது.

Related Stories
Asia Cup Rising Stars 2025: அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டியை எங்கு காணலாம்?
IND vs SA ODI Series: கில்லுக்கு குணமடையாத காரணம்! SA-க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்!
Australia vs England 1st Test: கம்மின்ஸ் காயம்.. கேப்டனாக ஸ்மித்.. ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து பிளேயிங் லெவன் எப்படி?
Shubman Gill: விளையாட விருப்பம்.. அணியுடன் விமானத்தில் பயணித்த கில்! பிசிசிஐ மருத்துவக்குழு கூறுவது என்ன?
ICC U19 World Cup 2026: இந்தியா – பாகிஸ்தான் போட்டி இல்லை.. வெளியான அண்டர் 19 உலகக் கோப்பைக்கான அட்டவணை..!
Ind vs SA : 2வது டெஸ்டில் இருந்து வெளியேறும் சுப்மன் கில் – அவருக்கு பதிலாக களமிறங்கப்போவது யார் தெரியுமா?
வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?