AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைகாசி விசாகம் 2026 – வினை நீங்கி வெற்றி தரும் விரத முறை, வழிபாட்டு முறை

Vaikasi Visagam: வைகாசி விசாக திருநாளில் முருகப்பெருமானின் திருவடிகளைச் சரணடைந்து விரதமிருப்பதன் மூலம் தீவினைகளும், நீண்ட கால வேதனைகளும் துகள்துகளாகச் சிதறி மறைந்துவிடும், இந்த நன்னாளில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் பொருட்டு ஏழைகளுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம் போன்றவற்றை வழங்குவது நம் வினைகளின் அளவைக் குறைத்து முழுமையான விரத பலனைத் தரும்.

வைகாசி விசாகம் 2026 – வினை நீங்கி வெற்றி தரும் விரத முறை, வழிபாட்டு முறை
வைகாசி விசாகம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 20 May 2026 13:32 PM IST

வைகாசி விசாக திருநாள் என்பது தானமும் தர்மமும் செய்வதற்கு மிக உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது. தானங்களிலேயே மிக உயர்ந்த தானமாகிய அன்னதானத்தை இந்த நாளில் செய்வது விசேஷமானது. குறிப்பாக, கோடை காலத்தில் இந்தத் திருவிழா வருவதால், வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு குளிர்ந்த பொருட்களைத் தானமாக வழங்கலாம். நீர்மோர், பானகம், விசிறி மற்றும் தாகத்திற்குத் தண்ணீர் போன்றவற்றை ஏழைகளுக்கும் தேவையுடையவர்களுக்கும் வஞ்சனையின்றி வழங்க வேண்டும். இவ்வாறு பிறருக்குத் தானங்களைச் செய்யும்போது நம்முடைய வினைகளின் அளவு குறைந்து, நாம் எந்த நோக்கத்திற்காக விரதம் இருக்கிறோமோ அந்த விரதத்திற்குரிய முழுமையான பலனை முருகப்பெருமான் நமக்குக் கட்டாயம் பெற்றுத் தருவார்.

விரத முறைகளும் வழிபாட்டு நேரமும்

வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பது எப்படி என்ற கேள்வி பலருக்கும் எழலாம். நாள் முழுவதும் பட்டினியாக உபவாசம் இருக்க வேண்டுமா என்பது அவரவர் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. காலையிலிருந்து உபவாசமாக இருந்து மாலையில் வழிபாடு முடிந்த பின் உணவு உட்கொள்ளலாம் அல்லது இடைப்பட்ட நேரத்தில் பால் மற்றும் பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு விரதத்தைத் தொடரலாம். குழந்தை வரம் வேண்டுபவர்களும், நல்ல நல்வாழ்வு அமைய வேண்டும் என்று பிரார்த்திப்பவர்களும் இந்த நாளில் முழு மனதோடு விரதமிருந்தால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் அவர்கள் நினைத்த காரியம் நிச்சயமாக நிறைவேறும்.

இல்லத்தில் வழிபாட்டு முறை மற்றும் அபிஷேகம்

வைகாசி விசாகத்தன்று பெரிய அளவில் ஆடம்பரமாக வழிபடத் தேவையில்லை, மிக எளிமையான முறையிலேயே முருகப்பெருமானை வழிபடலாம். காலையிலேயே வீட்டைத் தூய்மை செய்து, இல்லத்தில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். விக்கிரகம் அல்லது வேல் வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே பால் அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பானது. வீட்டில் அபிஷேகம் செய்ய முடியாதவர்கள், அருகிலுள்ள முருகர் கோயிலுக்குப் பால் வாங்கிக் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம். இந்த நாளில் முருகப்பெருமானுக்குக் குளிர்ந்த பொருட்களால் செய்யப்படும் அபிஷேகம் நம் வினைகளை நீக்கி நம் மனதைச் சாந்தப்படுத்தும் என்பதால், முருகன் கோயில்களில் பால் காவடி மற்றும் பால்குடம் எடுத்து மக்கள் வழிபடுகின்றனர்.

நெய்வேத்தியம் மற்றும் நிறைவு வழிபாடு

முருகப்பெருமானுக்குரிய விசேஷ நாட்களில் இனிப்பான ஏதேனும் ஒரு பொருளை நெய்வேத்தியமாகப் படைப்பது வழக்கம். வைகாசி விசாகத்தன்று சர்க்கரைப் பொங்கல் அல்லது பாசிப்பருப்பு பாயசம் போன்ற இனிப்பு வகைகளைச் செய்து நெய்வேத்தியம் வைக்கலாம். காலை நேரத்தில் பணிக்குச் செல்பவர்கள் அல்லது இதையெல்லாம் செய்ய இயலாதவர்கள் எளிமையாக வாழைப்பழம் மற்றும் வெற்றிலை பாக்கு வைத்து வழிபடலாம். வைகாசி விசாகத்தன்று காலை வேளையிலேயே வழிபாடு செய்வது மிக விசேஷமானது என்றாலும், பணி நிமித்தமாக முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வழிபடலாம். அருகில் இருக்கும் சிறிய முருகன் கோயிலுக்காவது சென்று வழிபட்டு, முருகனின் பேரருளையும் பெருங்கருணையையும் பெற்று வாழ்வில் உய்யுமாறு தேசமங்கேற்கரசி அவர்கள் இப்பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us