AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Astrology: கைகொடுக்கும் நவராத்திரி.. இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!

Navratri Horoscope: நவராத்திரி பண்டிகையைத் தொடர்ந்து, அடுத்த நான்கு மாதங்கள் இந்தியாவில் பண்டிகைக் காலமாக இருக்கும். இந்த ஆண்டு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை கொண்டாடப்படும் நவராத்திரியால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கப்போகிறது.

Astrology: கைகொடுக்கும் நவராத்திரி.. இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!
நவராத்திரி ராசிபலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Sep 2025 14:04 PM IST

நவராத்திரி வந்து விட்டாலே இந்தியாவில் அடுத்த 4 மாதங்கள் பண்டிகை காலம் தான் என்பது இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்படியான நரராத்திரி இந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 2  ஆம்  தேதி வரை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படும் தசரா பண்டிகை, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், பார்வதி தேவியின் ஆசிகளையும் கொண்டு வரப் போகிறது. ஐந்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் கட்டம் மாறப் போகிறது. அந்த வகையில் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். குறிப்பாக, எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.

  1. ரிஷபம்: இந்த ராசிக்கு சனி, ராகு, குரு, சுக்கிரன், புதன், ராகு ஆகிய கிரகங்கள் சாதகமாக இருப்பது மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களால் தொட்ட அனைத்தும் தங்கமாக மாறும். லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியடைவார். பொதுவாக, கையில் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறும். வேலையில் பதவி உயர்வு, சிறந்த வேலைக்கு மாறுதல், வெளிநாட்டில் வேலை கிடைப்பது போன்றவை நடக்கும்.  தொழிலில் உத்வேகம் அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ள நபருடன் திருமணம் உறுதியாகும்.
  2. மிதுனம்: ராசியின் அதிபதியுடன் புதன், சூரியன், செவ்வாய், குரு, சனி ஆகியோர் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால், பல விஷயங்களில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அதிக வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்கள். எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அது கைகூடிவரும். வேலை முயற்சிகளில் மட்டுமல்ல, திருமண முயற்சிகளிலும் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வருமானத்தை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படும். சம்பளம், வேலையில் சலுகைகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். பங்குகள், முதலீடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் லாபகரமாக இருக்கும்.
  3. கன்னி: ராசி அதிபதி புதன் சூரியனுடன் உச்ச நிலையில் சஞ்சரிப்பதால், குரு, ராகு, சனி ஆகியோரும் சாதகமாக இருப்பதால், அரசியல் செல்வாக்கு பெருமளவில் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி, பிரபலமாக அங்கீகாரம் பெற வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கான பாதை அமையும். குழந்தைப் பேறு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணக்காரருடன் திருமணம் அமையும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும்.
  4. துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு சனி, ராகு, குரு, சுக்கிரன் மற்றும் ராவணன் ஆகியவையின் இணைவு காரணமாக பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எந்தத் துறையிலும் இருப்பவர்கள் உயர் பதவிகளை ஏற்பார்கள். வருமானம் அதிகரிக்கும், குறையாது. நிதி ஸ்திரத்தன்மை எகிறும். வேலையில்லாதவர்களுக்கு பிற நாடுகளிலிருந்து எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ள குடும்பத்துடன் திருமணம் சாத்தியமாகும். தனிப்பட்ட, நிதி மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும்.
  5. மகரம்: சனி மற்றும் ராகுவுடன் சேர்ந்து, சூரியன், புதன் மற்றும் செவ்வாய் இந்த ராசிக்கு சாதகமாக இருப்பார்கள், இதனால் வாழ்க்கை வளமாக இருக்கும்.ராஜ மரியாதை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பளம்  மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும்.  தொழில்கள் விரிவடையும். பணியாளர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் சாதகமாக தீர்க்கப்படும். குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. வருமானத்தில் எதிர்பாராத அதிகரிப்பு இருக்கும்.
  6. கும்பம்: கிரகங்களின் பலத்தால், இந்த ராசிக்கு முந்தைய நாளில் சனியின் செல்வாக்கு முற்றிலும் குறையும். இந்த ராசிக்கு சனி, குரு, சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் சாதகமாக இருப்பதால், உங்கள் வேலையில் நிச்சயமாக அதிகாரம் கிடைக்கும். ஒரு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் வாய்ப்பும் உள்ளது. பங்குகள், முதலீடுகள், நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து வருமானம் தரும் முயற்சிகளும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட லாபகரமாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்கும்.

(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us