AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Astrology: 3 மாதத்துக்கு குரு யோகம்.. இந்த 6 ராசிக்காரர்கள் ரெடியா இருங்க!

ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்களில் குரு பகவான் அதிக பலம் பெறுகிறார். இதனால் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ராசிகளுக்கு பண வரவு, புதிய வீடு, குழந்தை பாக்கியம் போன்ற அற்புதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வருமானம் அதிகரிப்பு, தொழில் வளர்ச்சி இருக்கும் என சொல்லப்படுகிறது.

Astrology: 3 மாதத்துக்கு குரு யோகம்.. இந்த 6 ராசிக்காரர்கள் ரெடியா இருங்க!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Jul 2025 20:41 PM IST

ஜோதிடத்தைப் பொறுத்தமட்டில் நவக்கிரகங்கள் தான் அண்ட சராசங்களையும் செயல்படுத்துவதாக நம்பப்படுகிறது. இதில் ஒவ்வொரு கிரகமும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் மிகவும் புனிதமான கிரகமாக சொல்லப்படும் குரு, ஜூலை, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தனது பலத்தை பெருமளவில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 8 ஆம் தேதிக்குப் பிறகு, அது சூரியனின் செல்வாக்கிலிருந்து வெளியேறி, 2025 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடக ராசியில் நுழைந்து உச்சம் பெறும். இதன் காரணமகா குரு பகவான் சில ராசிக்காரர்களுக்கு பணம், வீடு மற்றும் குழந்தை விஷயங்களில் முழுமையாக அருள்வார் என சொல்லப்படுகிறது. இதனால் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் சில பலன்களை பெறுவார்கள். அதனைப் பற்றிக் காணலாம்.

என்னென்ன ராசிகள் தெரியுமா?

  • ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு பண ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்புள்ளது. பங்குகள், முதலீடுகள் உட்பட அனைத்து வருமானம் தரும் முயற்சிகளும் எதிர்பார்ப்புகளுக்கு மேலான பலன்களைத் தரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். திருமணம் மற்றும் வேலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். உத்தியோகத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் கணிசமாக அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் எதிர்பார்த்த அளவில் இருக்கும். குழந்தை பேறுக்கான வாய்ப்பு நிச்சயமாக அமையும்.
  • சிம்மம்: இந்த ராசிக்கு சாதகமான நிலையில் சஞ்சரிக்கும் குரு பகவானால், ஜூலை, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த ராசிக்காரரின் நிதி நிலைமையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும். பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவது நல்லது. பல திசைகளிலிருந்தும் வருமானம் அதிகரிக்கலாம். சில முக்கிய நபர்களுடன் லாபகரமான தொடர்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குழந்தை பிறப்பதற்கான நல்ல செய்தி வந்து சேரும்.
  • கன்னி: இந்த ராசி தற்போது பத்தாமிடத்திலும் சுப வீடுகளிலும் சஞ்சரிப்பதால், நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். திடீர் நிதி ஆதாயத்திற்கும் வாய்ப்புள்ளது. சொத்து மற்றும் உடைமைகள் ஒன்று சேரும். நீங்கள் செலுத்த வேண்டிய பணம் அனைத்தும் கிடைக்கும். சம்பளம், சலுகைகள் மற்றும் வேலையில் பதவி உயர்வு இருக்கும். தொழில் மற்றும் வணிகம் லாபகரமாக இருக்கும். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நிச்சயமாக நனவாகும். நிதி சிக்கல்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.
  • துலாம்: இந்த ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் குரு பகவான் இருக்கும் நிலையில், அவர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சம் பெறுகிறார். இதனால் இந்த மூன்று மாதங்களில் பல ராஜ யோகங்களும் பாக்ய யோகங்களும் ஏற்படும். வீடு மற்றும் வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு நிச்சயமாக ஏற்படும். சொத்து தகராறுகள் சாதகமாக தீர்க்கப்படும். சொத்துக்களின் மதிப்பு கணிசமாக அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு இருக்கும். சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குழந்தைபேறு தொடர்பான நல்ல செய்தி வரும்.
  • தனுசு: இந்த ராசியின் ஏழாவது மாதத்தில் சஞ்சரிக்கும் குரு, கடகத்தில் இரண்டு மாதங்கள் உச்சத்தில் இருப்பார். இதனால் இந்த ராசியின் நிதி நிலைமையை முற்றிலுமாக மாறுபடும். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் அல்லது  காதல் ஏற்படும். வீடு மற்றும் வாகனங்கள் வாங்கும் யோகங்கள் ஏற்படும். வேலையில் சுப முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் மிகவும் லாபகரமாக இருக்கும்.
  • மீனம்: இந்த ராசிக்கு, நான்காவது வீட்டில் சஞ்சரிக்கும் குருவால், வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அதனை  அதிகரிக்க தகுந்த முயற்சிகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. லாபகரமான தொடர்புகள் உண்டாகும். பெரும்பாலான நிதி மற்றும் சுகாதார பிரச்சினைகள் தீர்க்கப்படும். வீடு மற்றும் வாகனத்தில் லாபம் ஏற்படும். குழந்தை பிறப்பு தொடர்பான செய்திகள் வந்து சேரும்.

(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us