AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமாவாசை வழிபாடு: செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்…

Amavasya Rituals: அமாவாசை நாளில் அதிகாலையில் நீராடி மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பதும், காகத்திற்கு உணவளித்த பின் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவதும் பித்ரு தோஷங்களை நீக்கி குடும்பத்திற்கு பெரும் புண்ணியத்தைச் சேர்க்கும். எதிர்மறை சக்திகளின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இரவு நேரப் பயணங்களையும் ஆள் நடமாட்டமில்லாத இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

அமாவாசை வழிபாடு: செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்…
அமாவாசை தினம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 Jul 2026 06:17 AM IST

இந்து சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினம் முன்னோர்களை வழிபடுவதற்கும், நம் வாழ்வில் உள்ள பித்ரு தோஷங்களை நீக்குவதற்கும் மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நாம் செய்யும் சில ஆன்மீக வழிபாடுகள் குடும்பத்திற்கு நன்மைகளைத் தரும் வேளையில், தெரியாமல் செய்யும் சில தவறுகள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடும் என்று ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, அமாவாசை திதியில் நாம் எவற்றையெல்லாம் செய்யலாம் மற்றும் எவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விரிவான தொகுப்பை இங்கு காண்போம்.

முன்னோர் வழிபாடும் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளும்

அமாவாசை தினத்தின் முதன்மையான கடமை பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதே ஆகும். இந்நாளில் அதிகாலையிலேயே எழுந்து கடலிலோ, புண்ணிய நதிகளிலோ அல்லது வீட்டிலோ நீராடி, மறைந்த நம் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து திதி கொடுப்பது அவர்களின் ஆன்மாவை சாந்திடையச் செய்யும். மேலும், இந்நாளில் வீட்டை சுத்தப்படுத்தி, வாசலில் கோலம் போடுவதைத் தவிர்த்து, மதிய வேளையில் முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளை சமைத்து காக்கைக்கு வைப்பது மிக முக்கியம். வசதியற்றவர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்குவது அல்லது ஆடை, குடை போன்றவற்றை தானமாக அளிப்பது நம் குடும்பத்தின் ஏழு தலைமுறை பாவங்களையும் போக்கி புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கையாகும்.

தவிர்க்க வேண்டிய ஆன்மீக மற்றும் வாழ்வியல் தடைகள்

அமாவாசை தினத்தன்று வீட்டில் சுப காரியங்களான திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப்பிரவேசம் அல்லது புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்நாளில் சந்திரன் மறைந்திருப்பதால், சுப காரியங்களுக்கான சுப முகூர்த்த நாளாக இது கருதப்படுவதில்லை. மேலும், வீட்டின் வாசலில் கோலம் போடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் கோலம் போடுவது என்பது மங்களகரமான வரவேற்பைக் குறிக்கும், ஆனால் அமாவாசை பித்ருக்களுக்கான நாள் என்பதால் அவர்கள் வீட்டிற்குள் வரும்போது தடங்கல் ஏற்படக்கூடாது என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்நாளில் அசைவ உணவுகள் உண்பதையும், மது அருந்துவதையும் முற்றிலும் தவிர்த்து, முழுமையான சாத்வீக உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

Also Read: சதுரகிரி மலை தரிசனம்: பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி… வெளியான முக்கிய அறிவிப்பு!

எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்கும் வழிமுறைகள்

அமாவாசை என்பது பிரபஞ்சத்தில் ஈர்ப்பு விசை மாறுபடும் ஒரு காலம் என்பதால், மனிதர்களின் மனநிலையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்நாளில் கோபப்படுவதையோ, குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், வெட்டவெளிகள், மயானப் பகுதிகள், ஆள் நடமாட்டமில்லாத நீர்நிலைகள் மற்றும் இரவு நேரப் பயணங்களை இந்நாளில் தவிர்ப்பது நல்லது; ஏனெனில், அமாவாசை இரவில் எதிர்மறை சக்திகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Follow Us