Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Hair Care: ஜில் கிளைமேட் வந்தவுடன் தலையில் பொடுகு தொல்லையா..? இதை செய்தால் உடனடியாக நீங்கும்!

Dandruff Relief Tips: ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் பொடுகு இல்லாத கூந்தலை நீங்கள் விரும்பினால், இந்த எளிய வீட்டு வைத்தியம் உதவும். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த கூந்தல் தீர்வு, முடி உதிர்தலைக் குறைப்பது மட்டுமல்லாமல், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Hair Care: ஜில் கிளைமேட் வந்தவுடன் தலையில் பொடுகு தொல்லையா..? இதை செய்தால் உடனடியாக நீங்கும்!
பொடுகை நீக்கும் முறைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Nov 2025 22:43 PM IST

குளிர் மற்றும் மழை காலம் வந்தவுடன், பலரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறார்கள். குளிர்காலம் என்பது சரும பிரச்சனைகள் மட்டுமல்ல, கூந்தல் பிரச்சனைகளும் நிறைந்த காலமாகும். பொடுகு (Dandruff) ஒரு பொதுவான பிரச்சனை. ஒருமுறை பொடுகு வந்துவிட்டால், அது விரைவில் நீங்காது. பொடுகு உங்கள் தலைமுடியை (Hair Care) வறண்டதாகவும், உயிரற்றதாகவும் ஆக்குகிறது. வெளியே செல்வது கடினமாகிவிடும். ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் பொடுகு இல்லாத கூந்தலை நீங்கள் விரும்பினால், இந்த எளிய வீட்டு வைத்தியம் உதவும். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த கூந்தல் தீர்வு, முடி உதிர்தலைக் குறைப்பது மட்டுமல்லாமல், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அந்தவகையில், பொடுகை நீக்கும் சமையலறை பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இது உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்கும். சூடான தேங்காய் எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடி வேர்களுக்கு ஊட்டமளித்து, வறட்சியை குறைத்து பொடுகு உருவாவதைத் தடுக்கிறது. எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம், பாதுகாப்பு அடுக்கை வலுப்படுத்தி எரிச்சலை குறைக்கும். தொடர்ந்து, எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும்.

ALSO READ: கூந்தலுக்கு நன்மை தரும் அரிசி தண்ணீர்.. வீட்டிலேயே ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்பட்டு இறந்த சரும செல்களை நீக்குகிறது. இது இயற்கையாகவே பூஞ்சை வளர்ச்சியைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் தலைமுடியை நனைத்து, சிறிது பேக்கிங் சோடாவை உங்கள் உச்சந்தலையில் மெதுவாக தேய்க்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு, முடியை கழுவலாம். இப்படி செய்வதன்மூலம், இது துளைகளை அவிழ்த்து, செதில்களை நீக்கி, உச்சந்தலையில் சமநிலையை மீட்டெடுக்கும்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது. இதனுடன் உச்சந்தலையின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை பொடுகு ஏற்படுத்தும் பூஞ்சைகளைக் கட்டுப்படுத்துகிறது. புதிய எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து உங்கள் உச்சந்தலையில் தடவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்வது பொடுகை நீக்குவது மட்டுமல்லாமல் உங்கள் உச்சந்தலையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

கற்றாழை ஜெல்:

கற்றாழையில் இயற்கையாகவே உச்சந்தலையை ஆற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. புதிய கற்றாழை ஜெல்லை நேரடியாக உங்கள் உச்சந்தலையில் தடவுவது எரிச்சலைக் குறைத்து, பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகளின் செயல்பாட்டைக் குறைக்கிறது.

ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடர் வினிகர் உச்சந்தலையின் இயற்கையான pH ஐ மீட்டெடுக்கிறது, இதனால் பொடுகு ஏற்படுத்தும் பூஞ்சைகள் வளர்வது கடினம். இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

ALSO READ: பெண்களின் இந்த 5 பழக்கவழக்கங்கள்.. உங்கள் சருமத்தை முன்கூட்டியே வயதாக்காகும்..!

வெந்தயம்:

வெந்தயத்தில் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைந்துள்ளன. இவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இரண்டு தேக்கரண்டி விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, பின்னர் அவற்றை அரைத்து ஒரு பேஸ்ட் செய்து உங்கள் உச்சந்தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு பிறகு அலசலாம். இது பொடுமை நீக்கி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வதை நிறுத்துகிறது.