GST Revenue India: வரலாற்றில் முதல்முறை! ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!
April 2025 GST Collection: 2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் ₹2.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது 2024 ஏப்ரல் மாதத்தை விட 12.6% அதிகம். இது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் இதுவரை இல்லாத உச்சம் பெற்றுள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதி வரி வசூலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது. மாநிலங்களின் வரி வசூலிலும் அதிகரிப்பு காணப்பட்டது.

நிர்மலா சீதாராமன் - ஜிஎஸ்டி வசூல்
டெல்லி, மே 1: 2025 ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி (GST) வசூல் 12.6 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 2.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசாங்கம் (Central Government) தெரிவித்துள்ளது. அரசாங்க தரவுகளின்படி, 2024 ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 2.10 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை 01, 2017 முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூலாகும். மார்ச் 2025 ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.96 லட்சம் கோடியாக இருந்தது. உள்நாட்டு பரிவத்தனைகளின் வருவாய் 10.7 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட ரூ. 1.9 லட்சம் கோடியாக உயர்த்துள்ளதாக ஜிஎஸ்டி தரவு காட்டுகிறது.
எவ்வளவு வசூல்..?
April 2025 GST Collections
Apr 2025: ₹2,36,716 Cr
Apr 2024: ₹2,10,267 Cr
Y-o-Y ↑12.6%Top 5 States GST Collection
Maharashtra – ₹41,645 Cr (↑11%) 👑
Karnataka – ₹17,815 Cr (↑11%)
Gujarat – ₹14,970 Cr (↑13%)
Haryana – ₹14,057 Cr (↑16%)
Tamil Nadu – ₹13,831 Cr (↑13%) https://t.co/pXDHyx15R2 pic.twitter.com/s2uG3dnAUk— Nationalist Mumbaikar 🇮🇳™ (@Ayush_Shah_25) May 1, 2025
அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2025 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு பணம் வசூல் ஆனது கிடையாது. இதுவரையிலான அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் நடந்திருப்பதும் தற்செயல் நிகழ்வு என்று கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ.46,913 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறும் தொகை 48.3 சதவீதம் அதிகரித்து ரூ.27,341 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சரிசெய்தலுக்குப் பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து ரூ.2.09 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
வெளியான தரவுகள்:
India’s April GST collection grew 12.6% to an all-time high of ₹2.37 lakh crore.#GST pic.twitter.com/VYjpUwthIJ
— IPO Reporter (@IpoReporter) May 1, 2025
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் எப்போது..?
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருக்கலாம். அப்படி இல்லையென்றால், ஜிஎஸ்டி கூட்டம் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகள் அந்தந்த பட்ஜெட் கூட்டத்தொடர்கள் மற்றும் சட்டமன்ற செயல்முறைகளில் மும்முரமாக உள்ளன. இதனால்தான் 56வது கவுன்சில் கூட்டத்தின் தேதியை நிர்ணயிக்கும் மையத்தின் முயற்சிகள் தாமதமாகி வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டும். இருப்பினும், கடந்த 4 மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை. கடைசி கூட்டம் டிசம்பரில் நடைபெற்றது.