ரூ.6 கோடி மதிப்பிலான 6.5 மி.லி. கொடிய பாம்பு விஷம் பறிமுதல்.. 7 பேர் அதிரடியாக கைது..

Cobra venom worth ₹6 crore seized: இந்த சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கும்பலைப் பிடிக்க காவல்துறை திட்டமிட்டது. விஷத்தை வாங்க ஆர்வமுள்ளவர்களைப் பிடிப்பதற்காக, அவரைப் பயன்படுத்தி அதனை வாங்கும் சாத்திய உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள வைத்தனர். அப்போது, அவருடன் பேசிய சிலர் ரூ.8 கோடிக்கு பாம்பு விஷத்தை வாங்க ஒப்புக்கொண்டனர்.

ரூ.6 கோடி மதிப்பிலான 6.5 மி.லி. கொடிய பாம்பு விஷம் பறிமுதல்.. 7 பேர் அதிரடியாக கைது..

கொடிய பாம்பு விஷம் பறிமுதல்

Updated On: 

21 Jan 2026 08:44 AM

 IST

குஜராத், ஜனவரி 21: குஜராத்தின் சூரத் நகரில், சிறப்புப் போலீஸ் குழு (SOG) முதல் முறையாக ₹5.85 கோடி மதிப்புள்ள நாகப்பாம்பு விஷத்தைப் பறிமுதல் செய்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில், போலீசார் சுமார் 6.5 மில்லி விஷத்தை விற்க முயன்ற 7 பேரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்த விஷம் அகமதாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை வியாபாரியிடம் இருந்து பெறப்பட்டு, சட்டவிரோத விற்பனைக்காக சூரத்திற்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. பாம்பு விஷத்திற்கு முறையான மருத்துவப் பயன்கள் இருந்தாலும், ரேவ் பார்ட்டிகளில் போதைக்காக அதன் தவறான பயன்பாடு அதிகரித்து வருவதால், முழு நெட்வொர்க்கையும் கண்டறிய தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

வாடிக்கையாளர் போல வலை விரித்த போலீசார்:

இதுகுறித்து மேலும் கிடைத்த தகவலின்படி, சூரத் சிறப்பு போலீஸ் குழுவினர், வாடிக்கையாளர்கள் போல் நடித்து கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசி அந்தக் கும்பலை வலையில் சிக்க வைத்துள்ளனர். சம்பவத்தன்று, அவர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, ​​அவர்கள் சந்தேகத்திற்கிடமான ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர். அவரிடம் ஒரு சிறிய கொள்கலனில் பாம்பு விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகவும் வீரியம் மிக்க பாம்பு விஷம் என்றும், இது கள்ளச் சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும் தெரியவந்தது. அவரிடமிருந்து 6.5 மில்லி லிட்டர் பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது, அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 5.85 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.8 கோடிக்கு விஷத்தை வாங்க ஒப்புதல்:

பாம்பு விஷத்தை விற்க வந்த அந்த நபர் சோனி என அடையாளம் காணப்பட்டார். அவர் அதை அதிக விலைக்கு விற்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்த சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கும்பலைப் பிடிக்க காவல்துறை திட்டமிட்டது. விஷத்தை வாங்க ஆர்வமுள்ளவர்களைப் பிடிப்பதற்காக, அவரைப் பயன்படுத்தி அதனை வாங்கும் சாத்திய உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள வைத்தனர். அப்போது, அவருடன் பேசிய சிலர் ரூ.8 கோடிக்கு பாம்பு விஷத்தை வாங்க ஒப்புக்கொண்டனர், மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க : பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் பரிதாப பலி.. குஜராத்தில் சோக சம்பவம்!

விஷத்தை வாங்க வந்தவர்கள் கைது:

அதைத் தொடர்ந்து, பாம்பு விஷத்தை வாங்க வந்த மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் மத்தியப் பிரதேசத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் சூரத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. குஜராத்தில் இவ்வளவு அதிக அளவு மதிப்புமிக்க பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நாகப்பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சூரத் போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், விஷத்தை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் அகமதாபாத்தைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரியைத் தேடி வருகின்றனர்.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..