‘1.25 லட்சம் லிட்டர் எரிபொருள்..’ விமான விபத்து குறித்து விளக்கமாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
Amit Shah Visits Crash Site Update : அகமதாபாத் விமான விபத்துக்குப் பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விபத்து நடந்த இடத்தையும், உயிர் பிழைத்தவரையும் சந்தித்தார். இறந்தோரின் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்குப் பின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தார்.

அமித்ஷா நேரடி விசிட்
அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, 2025, ஜூன் 13ம் தேதி மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். விபத்துக்குள்ளான AI171 விமானத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி உட்பட காயமடைந்தவர்களை அமித் ஷா சந்தித்தார். அப்போது பேசிய அவர், இறந்தவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும், டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு, உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
1.25 லட்சம் லிட்டர் எரிபொருள்
ஆய்வுக்குப்பின் விமான விபத்து தொடர்பான விஷயங்களை அமித்ஷா விளக்கமாக தெரிவித்தார். அதன்படி ‘விமானத்தில் 230 பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்தனர். உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணியை நான் சந்தித்தேன். விமானத்தில் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது, அதன் அழுத்தம் பெரிய விபத்தாக மாறியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவிக்கிறேன். நாடு முழுவதும் துக்கத்தில் மூழ்கியுள்ளது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்கிறது. விபத்து நடந்த 10 நிமிடங்களுக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.
அமித்ஷா நேரடி விசிட்
#WATCH | Ahmedabad Plane Crash | Union Home Minister Amit Shah meets with the injured, including one injured person who appears to be the lone survivor of the ill-fated flight AI171 that crashed earlier today. pic.twitter.com/t84YyoyseO
— ANI (@ANI) June 12, 2025
அமித் ஷா செய்தியாளர் சந்திப்பின் டாப் விஷயங்கள்
- வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 டி.என்.ஏ சோதனைகள் நடத்தப்படும். இறந்தவர்களின் டி.என்.ஏ மாதிரிகளும் உடல்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ சோதனைக்குப் பிறகு உடல்கள் ஒப்படைக்கப்படும். மறுஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அம்சமும் விவாதிக்கப்பட்டது. விசாரணையை விரைவாக முடிக்க விமானப் போக்குவரத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- இந்திய அரசும் குஜராத் அரசும் கூட்டாக நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தேன். டிஎன்ஏ சோதனை முடிந்த பின்னரே இறந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அறிவிக்கப்படும்.
- இந்த சம்பவம் நடந்த உடனேயே, குஜராத் அரசு சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து பேரிடர் மேலாண்மை பிரிவுகளுக்கும், இந்திய அரசின் CAPF பிரிவுகளுக்கும் தகவல் தெரிவித்தது. அனைத்து நிறுவனங்களும் கூட்டாக நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கின.
- சம்பவம் நடந்த இடத்தின் பல்வேறு பகுதிகள் பார்வையிடப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்களின் டி.என்.ஏ மாதிரி எடுக்கும் செயல்முறை விரைவில் நிறைவடையும். வெளிநாட்டில் உள்ள உறவினர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் வந்தவுடன் அவர்களின் டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்படும்.
- குஜராத்தின் தடய அறிவியல் ஆய்வகம் (FSL) மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU) இணைந்து மிகக் குறுகிய காலத்தில் DNA பரிசோதனையை முடிக்கும், அதன் பிறகு இறந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் தங்குமிடம், ஆதரவு என தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்துத் துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.