AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று தொடங்கும் 3 புதிய அம்ரித் பாரத் ரயில்கள்.. எந்த வழித்தடம்? முழு விவரம்..

Amrith Bharat Train: முசாபர்பூரில் இருந்து சார்லபள்ளி (ஹைதராபாத் அருகே), தர்பங்காவிலிருந்து மதர் சந்திப்பு (அஜ்மீர் அருகே) வரை , மேலும் சாப்ராவிலிருந்து ஆனந்த் விஹார் முனையம் (டெல்லி) வரி இயக்கப்படும் 3 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகள் இன்று தொடங்குகிறது.

இன்று தொடங்கும் 3 புதிய அம்ரித் பாரத் ரயில்கள்.. எந்த வழித்தடம்? முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Sep 2025 12:57 PM IST

பீகார், செப்டம்பர் 29, 2025: பீகாரில் ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் 29, 2025 தேதியான இன்று 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்படுகிறது. பீகார், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவை இணைக்கும் இந்த ரயில்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவத்தை வழங்கும். முதல் ரயில் முசாபர்பூரில் இருந்து சார்லபள்ளி (ஹைதராபாத் அருகே) வரை இயக்கப்படும், மற்ற இரண்டு ரயில்கள் தர்பங்காவிலிருந்து மதர் சந்திப்பு (அஜ்மீர் அருகே) வரை இயக்கப்படும், மேலும் சாப்ராவிலிருந்து ஆனந்த் விஹார் முனையம் (டெல்லி) வரை இயக்கப்படும்.

இதனுடன், நான்கு பயணிகள் ரயில்களும் தொடங்கப்படுகிறது, மொத்தம் ஏழு ரயில்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வீடியோ கான்பரன்சிங் மூலம் நிகழ்ச்சியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காதலிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்.. அடித்த கொன்ற காதலியின் குடும்பம்!

அம்ரித் பாரத் ரயில் சேவை:


பாதுகாப்பான மற்றும் மலிவு விலை பயண விருப்பத்தை வழங்குவதற்காக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நடுத்தர வர்க்க மக்களிடையே பிரபலமாகியுள்ளது. இது தற்போது நாடு முழுவதும் 27 சேவைகளை இயக்குகிறது, அவற்றில் 10 பீகாரில் இருந்து இயக்கப்படுகின்றன. மேலும் மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டதன் மூலம், மொத்தம் 30 ஆக உயரும், அவற்றில் 13 பீகாரில் இருந்து இயக்கப்படும்.

முசாபர்பூர் – சார்லபள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்:

முசாபர்பூர் – சார்லபள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முசாபர்பூரிலிருந்து தென்னிந்தியாவிற்கு செல்லும் முதல் அம்ரித் பாரத் ரயிலாகும். இந்த ரயில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 10:40 மணி முதல் இயக்கப்படும், புதன்கிழமை இரவு 11:50 மணிக்கு சார்லபள்ளியை அடையும். 15294 என்ற ரயில் எண் கொண்ட சார்லபள்ளியிலிருந்து திரும்பும் ரயில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அதிகாலை 4:05 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் ஹாஜிபூர், பட்லிபுத்ரா, ஆரா, பக்சர், பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு, பிரயாக்ராஜ் சியோகி, ஜபல்பூர், இடார்சி, நாக்பூர் மற்றும் காசிபேட் வழியாக இயக்கப்படும்.

மேலும் படிக்க: அதிர்ந்த டெல்லி.. 17 பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கைதான சாமியார்!

சாப்ரா- டெல்லி ரயில் சேவை:

சாப்ராவை டெல்லியுடன் இணைக்கும் ரயில், பீகாரில் இருந்து டெல்லிக்கு செல்லும் ஆறாவது அம்ரித் பாரத் ரயிலாகும். இந்த ரயில் சிவான், தாவே, கப்தங்கஞ்ச், கோரக்பூர், பஸ்தி, கோண்டா, ஐஷ்பாக் (லக்னோ) மற்றும் கான்பூர் வழியாக இயக்கப்படும்.

தர்பங்கா– அஜ்மீர் ரயில் சேவை:

இந்த ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9:15 மணிக்கு மதர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12:45 மணிக்கு தர்பங்காவை அடையும். 19624 என்ற ரயில் எண் கொண்ட திரும்பும் ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை 4:15 மணிக்கு தர்பங்காவிலிருந்து புறப்பட்டு மறுநாள் பகல் நேரத்தில் மதியம் 1:20 மணிக்கு சென்றடையும். இந்த எக்ஸ்பிரஸ் கம்டௌல், சீதாமர்ஹி, ரக்சால், நர்கதியாகஞ்ச், கோரக்பூர், கோமதி நகர், கான்பூர், துண்ட்லா மற்றும் ஜெய்ப்பூர் வழியாக இயங்கும்.

 

 

 

Follow Us