Cinema Rewind: வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.. விஜய் வருத்தம்!
Vijay Talks About Constantly Missing Out On Being Famous : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருப்பவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்களை வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. மேலும் ஜன நாயகன் படத்தைத் தொடர்ந்து முழுவதும் அரசியல் செல்ல போகிறார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய பேட்டி ஒன்றில் ரஜினியின் படங்களைப் பற்றியும், தான் மிஸ் செய்யும் விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கோட் (The GOAT). இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்க, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் முன்னணி நடிகைகளாக சினேகா மற்றும் தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து தனது இறுதி படமான தளபதி 69 என்று அறிவிக்கப்பட்ட ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கியது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கை விஜய் முழுவதுமாக முடிக்கவும், மேலும் முழுவதும் அரசியலில் (Vijay political) இறங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்ததா என்பது குறித்துப் படக்குழு எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜய் முன்னதாக பேட்டியில் பேசியிருந்தார். அதில் நடிகராக ஆனபிறகு எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மற்றும் ரஜினியின் படங்களைத் திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத நிலையில் பற்றிப் பேசியிருக்கிறார். அதைப்பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
தளபதி விஜய்யின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
ரஜினிகாந்தின் படங்கள் குறித்தும், பிரபலத்தால் மிஸ் பண்ண விஷயங்கள் குறித்தும் விஜய் பேச்சு :
முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜயிடம், பிரபலமானதைத் தொடர்ந்து, தொல்லையாக அல்லது மிஸ் செய்யும் விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குத் தளபதி விஜய் , “ஒரு விஷயம் இருக்கு அதைக் கூட நான் தொல்லை என்று கூறமாட்டேன். நான் முன்னதாக சினிமாவிற்கு வருவதற்கு முன், நான் தனியாக பைக்கை எடுத்துவிட்டு, நண்பர்களுடன் வெளியே எங்கேயாவது சுற்றுவோம். மேலும் டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிப்பது மற்றும் தியேட்டருக்கு போவது எனச் சுதந்திரமாக இருந்தேன்.
நடிகர் ரஜினி சாரின் திரைபடங்களை முதல் நாள் முதல் காட்சியில், திரையரங்குகளில் கூட்டத்துடன் பார்ப்பேன். இது போன்ற விஷயங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். எனக்குப் பொதுமக்களுடன் உலாவுவது, சமூகத்தினருடன் செல்வது என இது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். போன்ற விஷயங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். மற்றபடி ரசிகர்கள் தொல்லையால்தான் கூறுகிறேன் என்று எல்லாம் கிடையாது என்று தளபதி விஜய் அந்த பேட்டியில் பேசியிருந்தார்.