Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vaikasi Pournami: வைகாசி பௌர்ணமி எப்போது? – அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க!

பௌர்ணமி என்பது இறை வழிபாட்டிற்கு உகந்த நாளாக சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிகழ்வு இதுவாகும். பௌர்ணமியன்று பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் விளக்கேற்றி வழிபடுவதால் வளம் பெருகும் என்பது ஐதீகம். லட்சுமி, துர்க்கா தேவியரை வழிபடுவதால் நினைத்தது நிறைவேறும்.

Vaikasi Pournami: வைகாசி பௌர்ணமி எப்போது? – அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க!
வைகாசி பௌர்ணமி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 Jun 2025 21:37 PM

இந்து மதத்தை பொறுத்தவரை சாஸ்திரத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் 14 வகையான திதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி உள்ளது. இதில் அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட உகந்த நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி நாள் இறை வழிபாடு நடத்துவதற்கான நாளாக பார்க்கப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது நிலவு முழுமையாக தெரியும் ஒரு நிகழ்வே பௌர்ணமி என அழைக்கப்படுகிறது. இது மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முன், நடு மற்றும் இறுதி பகுதியில் பௌர்ணமி திதி வரலாம். இப்படியான நிலையில் வைகாசி மாதத்திற்கான பௌர்ணமி ஆனது 2025, ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இந்த நாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் பற்றி காணலாம்.

பௌர்ணமி நாளில் என்ன செய்ய வேண்டும்?

பௌர்ணமி என்றாலே முழு பிரகாசத்துடன் நிலவு தரும் ஒளி தான் நம் அனைவரும் நினைவுக்கு வரும். இந்த வெளிச்சத்தை தரும் சந்திர பகவானை தரிசிப்பதன் மூலம் அவருக்கு ஒளியை அளிக்கும் சூரிய பகவானை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும் இந்நாளில் பெண் தெய்வங்களை வழிபடுவது மிகச் சிறப்பான ஒன்றாகும். அதே சமயம் அதிகாலையில் எழுந்து புனித நீராடி அம்பிகை குரிய பூஜைகள் செய்து இரு வேலைகள் விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்றும், நம்மைச் சுற்றியுள்ள துன்பங்கள் விலகும் என்றும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேலும் வாழ்க்கையில் இருந்த இருள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் அமையும் எனவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை நீங்கள் பௌர்ணமி விரதம் இருந்தால் கட்டாயம் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். இதனால் சகலவித வளங்களும் நமக்கு வாழ்வில் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதெபோல் பௌர்ணமி வழிபாட்டில் தனித்துவமாக லட்சுமி, துர்க்கா தேவிகளை மட்டும் வணங்கினால் நினைத்ததெல்லாம் ஈடேறும் எனவும் சொல்லப்படுகிறது.

முன்பு காலத்தில் எல்லாம் பௌர்ணமி வெளிச்சத்தில் பொதுமக்கள் அருகில் இருக்கும் நீர் நிலைகளின் கரைகளில் சென்று இரவு நேரத்தில் பொழுதை ஒன்றாக கழிப்பதிலும், வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் இரவு பொழுதை கடப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர் என சொல்லப்படுகிறது. தற்போது அந்த நிகழ்வுகள் எல்லாம் மறைந்து பௌர்ணமி என்றால் முழு நிலவு, அன்றைய நாளில் வீட்டில் வழிபாடு என்பதோடு சடங்குகள் சுருங்கி விடுகிறது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கட்டுரையில் சொல்லப்படுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

திருமண வாழ்க்கை.. விஜய்யிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்ட கேள்வி!
திருமண வாழ்க்கை.. விஜய்யிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்ட கேள்வி!...
டீயுடன் இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
டீயுடன் இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!...
அந்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கமாட்டேன் - சரண்யா பொன்வண்ணன்!
அந்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கமாட்டேன் - சரண்யா பொன்வண்ணன்!...
No Added Sugar VS Sugar Free - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
No Added Sugar VS Sugar Free - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?...
சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி...
வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.. விஜய் வருத்தம்!
வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.. விஜய் வருத்தம்!...
வைகாசி பௌர்ணமி எப்போது? - அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க
வைகாசி பௌர்ணமி எப்போது? - அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க...
எளிமையாக ஆவணங்களை PDF-ஆ மாத்தலாம் - கூகுள் டிரைவின் புதிய வசதி
எளிமையாக ஆவணங்களை PDF-ஆ மாத்தலாம் - கூகுள் டிரைவின் புதிய வசதி...
மகனை நினைத்து நெகிழ்ச்சி.. சிம்ரன் வெளியிட்ட வீடியோ!
மகனை நினைத்து நெகிழ்ச்சி.. சிம்ரன் வெளியிட்ட வீடியோ!...
கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு...
பென்ஸ் முழுவதும் லோகேஷின் கதை இல்லை- இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்!
பென்ஸ் முழுவதும் லோகேஷின் கதை இல்லை- இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்!...