இயக்குநர் ராமின் பறந்து போ படத்தைப் புகழ்ந்த டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர்
Director Abishan Jeevinth Praised Paranthu Po Movie: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கியதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமா3னவராக மாறியவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இவர் சமீபத்தில் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படத்தை பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அபிஷன் ஜீவிந்த்
இயக்குநர் ராம் (Director Ram)தமிழ் சினிமாவில் கொடுத்துள்ள படங்கள் அனைத்தும் மனித உணர்வுகளை மையமாக வைத்தே இருக்கும். இயக்குநர் ராமின் இயக்கத்தில் வெளியான படங்கள் சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் மற்றும் உறவுகளுக்கு இடையே இருக்கும் பிணைப்பை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கும். அந்த வரிசையில் தற்போது பறந்து போ படமும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் பறந்து போ படத்தில் இருந்து தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது படக்குழு. இந்த நிலையில் இயக்குநர் ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் பறந்து போ படத்தைப் பார்த்துவிட்டு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Director Abishan Jeevinth)வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது, ராம் சாரின் அற்புதமான படமான பரந்து போவை இப்போதுதான் பார்த்தேன் – என் இதயம் மிகவும் நிறைந்துள்ளது. நகைச்சுவை மற்றும் ஆழமான உணர்ச்சிகளுடன் அழகாக சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே உங்களுடன் இருக்கும். தயவுசெய்து இந்த ரத்தினத்தை திரையரங்குகளில் தவறவிடாதீர்கள் என்று தெரிவித்து உள்ளார்.
பறந்து போ படம் குறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Just watched the brilliant film Paramthu Po by Ram sir — my heart is so full. Beautifully balanced with humour and deep emotions. It truly stays with you. Please don’t miss this gem in theatres. 🤍
— Abishan Jeevinth (@Abishanjeevinth) June 25, 2025
இயக்குநர் ராமின் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படம்:
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் துறு துறு மகன் மற்றும் அவரது அப்பா இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் நடிகர் சிவா நாயகனாக நடித்துள்ளார்.
அவருடன் இணைந்து நடிகர்கள் கிரேஷ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநர் ராமின் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.