Cinema Rewind: நட்பு டூ காதல்.. சூர்யா பற்றி ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Jyothika Suriya Love Story : தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு தொடக்க படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் ஜோதிகா. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் திரைப்படங்கள் வ எலியாகி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் சூர்யாவுடன் காதல் ஆரம்பமானது பற்றி ஓபனாக கூறியுள்ளார்.

ஜோதிகா மற்றும் சூர்யா
நடிகை ஜோதிகா (yothika) தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி கதாநாயகியாகப் படங்களில் நடித்து அசத்தி வந்தார். இவர் கோலிவுட்டில் நடிகர்கள் சூர்யா (Suriya),விஜய் (Vijay) மற்றும் அஜித் குமார் (Ajith Kumar) எனப் பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார். இவருக்குத் தமிழ் சினிமாவில் நல்ல பிரபலம் இருந்தாலும் இவர் சினிமாவில் அறிமுகமாக அமைந்தது இந்தி படங்கள்தான். கடந்த 1998ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்திலே தமிழில் அறிமுகமானார். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் (SJ Suryah) வாலி (Vaalee) படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்திருந்தது. மேலும் தமிழில் இரண்டாவது படத்திலே சூர்யாவுடன் இணைந்து நடித்தார்.
இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்துதான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலரத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ரசிகர்களுக்குப் பிடித்த செலிபிரிட்டி ரியல் ஜோடிகளின் பட்டியலில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் பெயர்தான் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் நடிகை ஜோதிகா முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், சூர்யாவுடன் காதல் எவ்வாறு ஆரம்பித்தது என்பதைப் பற்றி ஓபனாக பேசியிருந்தார். அவர் அவ்வாறு என்ன கூறினார் என்பதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.
சூர்யாவுடன் காதல் ஆரம்பமானதை பற்றி ஜோதிகா பேச்சு :
அந்த நேர்காணலில் நடிகை ஜோதிகா சூர்யாவுடன் காதல் ஆரம்பமானது மற்றும் இருவருக்கிடையேயான பேச்சுவார்த்தைகளைப் பற்றி ஓபனாக கூறியிருந்தார். அதில் ஜோதிகா, “எங்களின் காதல் மிகவும் மெதுவாகத்தான் தொடங்கியது. நாங்கள் இருவரும் படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் ஆரம்பத்தில் 2 வருடங்களாக அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை. மிகவும் குறைவாகத்தான் பேசுவோம் அதுவும் படப்பிடிப்பில் மட்டும்தான் பேசிக்கொள்வோம். பின் நான் மாதவனுடன் டும் டும் டும் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகியிருந்தபோது, சூர்யாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது.
அப்போது சூர்யா என்னிடம் , “ஜோ உங்களின் நடிப்பு நன்றாக இருந்தது இன்னும் அருமையாக நடியுங்கள்” என்று கூறினார். நானும் அதன்பிறகு சூர்யாவின் நந்தா திரைப்படம் வெளியாகியிருந்தது. அப்போது நானும் அவருக்கு போன் பண்ணி , சூர்யா அருமையாக இருக்கிறது, உங்களை இவ்வாறு படத்தில் பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கிறது” என்று நானும் அவரிடம் கூறினேன். அப்படியே எங்களின் உறவு நிலை நண்பர்களாகத் தொடங்கியது. அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அப்படியே ஒரு 4 அல்லது 5 வருடத்தில் காதலர்களாக மாறி திருமணம் செய்துகொண்டோம் என்று நடிகை ஜோதிகா தங்களின் காதல் கதையைப் பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார்.