Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : மைசூரில் ஜெயிலர் 2 ஷூட்டிங்.. ரஜினிகாந்த்தைப் பார்க்கக் குவிந்த ரசிகர்கள் கூட்டம்!

Rajinikanth Met Fans At Jailer 2 Mysore Shooting : தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். கூலி படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்துவரும் நிலையில், அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajinikanth : மைசூரில் ஜெயிலர் 2 ஷூட்டிங்.. ரஜினிகாந்த்தைப் பார்க்கக் குவிந்த ரசிகர்கள் கூட்டம்!
மைசூரில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 23 Jun 2025 16:00 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன் (Vettaiyan) . இந்த படத்தில் ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் (Gnanavel) இயக்கியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj)  கூலி (Coolie)  திரைப்படத்தில் இணைந்தார். இந்த படமானது ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் இணைந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவை பொள்ளாச்சி பகுதியில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடிக்கும் நிலையில், அவருடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் நடிகர் யோகிபாபு இணைந்து நடித்து வருகின்றனர். கோவை பொள்ளாச்சி பகுதியை தொடர்ந்து, கேரளாவிலும் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது.

இதை அடுத்ததாக, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு ஜெயிலர் 2 படக்குழு மைசூர் (Mysore) சென்றுள்ளது. மைசூரில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்ற ரஜினிகாந்த்தைக் காண அங்குள்ள ரசிகர்கள் அலைகடலெனத் திரண்டுள்ளனர். அவர்களை நடிகர் ரஜினிகாந்த்தும் காரில் கையசைத்தபடியே சந்தித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

மைசூர் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்தை காண வந்த ரசிகர்கள் கூட்டம் :

ஜெயிலர் 2 படப்பிடிப்பு

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியானது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. கடந்த 2025, மார்ச் முதல் வாரத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியநிலையில், கோவை, கேரளா போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. அங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காகப் படக்குழு மொத்தமாக மைசூர் சென்றுள்ளது.

இந்நிலையில், மைசூரில் நடிகர் ரஜினிகாந்த்தைக் காண ரசிகர்கள் கூட்டம் திரண்டுள்ளது. இந்நிலையில் காரில் வந்த நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை பார்த்ததும் மகிழ்ச்சியில் கையசைத்தார். மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்ததாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் மொத்த படப்பிடிப்பு பணிகளும் வரும் 2025, டிசம்பர் மாதத்தில் நிறைவடையும் என ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதை தொடர்ந்து இப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் அல்லது தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.